பருந்து செய்திருக்கும் வேலைய பாருங்க – குடிப்பழக்கத்தை விட சொன்ன ரஜினியை கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை

0
1615
- Advertisement -

ஜெயிலர் ஆடியோ லான்ஞ்சில் ரஜினி பேசியது குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து போட்டு இருக்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரஜினி நடித்த ஜெயிலர் படம் குறித்து தான் ட்ரெண்டிங் ஆக சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த படம் இந்த மாதம் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதிலும் இந்த படத்தின் இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. இந்த பாடல் வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதோடு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் வலம் வருபவர் விஜய் தான் என்று கூறுகிறார்கள். இதனை அடுத்து சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இசைவெளியீட்டு விழா:

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சோசியல் மீடியாவில் விஜய் குறித்து பரவிய வதந்திக்கும், குட்டி ஸ்டோரி குறித்தும் மாஸாக பேசியிருந்தார். இதனால் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே சோசியல் மீடியாவில் பனிப்போர் நிகழ்ந்திருக்கிறது. இதில் யார் காக்கா, யார் கழுகு என்றெல்லாம் விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதேபோல் ஆடியோ லான்ஞ்சில் ரஜினி, குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள். நான் மட்டும் குடிக்காமல் இருந்திருந்தால் இப்போது இருக்கும் ரஜினிகாந்தெல்லாம் சும்மா. இதை விட பெரிய இடத்துக்கு சென்று இருப்பேன். குடியுங்கள் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், தினமும் குடிக்காதீர்கள்.

-விளம்பரம்-

குடிப்பழக்கம் குறித்து சொன்னது:

இதனால் வீட்டில் இருக்கும் நிம்மதி போய்விடும் என்று அட்வைஸ் எல்லாம் செய்திருந்தார். இதனை கேட்ட ரசிகர்கள் எல்லோரும் ரஜினியின் பேச்சை கேட்டு உற்சாகமாக கத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், நிகழ்ச்சி நடந்த அன்றே அரங்கத்தில் மது சப்ளையும் செய்திருந்ததாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் அவர்கள் ட்விட்டர் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஊருக்கு உபதேசம். பார்ல சகவாசம் தயவு செய்து கேட்டுக்கொள்கின்றேன் .

ப்ளூ சட்டை மாறன் டீவ்ட்:

யாரும் சரக்கு அடிக்க வேண்டாம்’ என்று சமீப காலமாக அறிவுரை சொல்லி வருகிறது பவ்யமான பருந்து. ஆனால், நிஜத்தில் பருந்து செய்திருக்கும் செயலென்ன தெரியுமா? தலைநகரில் உள்ள நுங்கபாக்கம் பகுதியில் உள்ள பிரபல ‘பனை தோப்பு’ ஹோட்டலுக்கு அருகே பருந்திற்கு சொந்தமாக ஒரு ஹோட்டல் இருந்தது. அதற்கு 97 இல் வெளியான தனது படத்தின் பெயரை சூட்டியிருந்தது பருந்து. தற்போது அதை மெயின்டெயின் செய்ய இயலாத காரணத்தால் இன்னொரு குரூப்பிற்கு கைமாற்றி உள்ளது. அங்கே தற்போது இருப்பது நூலகமோ, இலவச மருத்துவமனையோ இல்லை. பல மதுப்பிரியர்கள் வந்து செல்லும் பார் என்பது தான் ஹைலைட். ஊருக்கு உபதேசம். ஆனால், தன்னுடைய இடத்தில் பாருக்கு அனுமதி. பார்த்தீர்களா பருந்தின் இரட்டை வேடத்தை” என குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கொந்தளித்து போய் உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்கள் அந்த பாருக்கு அடிக்கடி குடிக்க போவீர்களா? என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்

Advertisement