தமிழ் சினிமாவில் பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. பெரியார், அம்பேக்த்தார் போன்ற தலைவர்களை தொடர்ந்து தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமும் தயாராகி வருகிறது.
இந்நிலையில் ஈழ தமிழர்களின் தலைவர் என்று கருதுத்தப்ட்ட பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா, பிரபாகரனின் கதாபாத்திரத்தில் நடிக்க விருக்கிறார். ஜிகிர்தண்டா படத்தில் தனது மிரட்டனாலான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.
ஜிகிர்தண்டா படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றிருந்தார். அதே போல சமீபத்தில் வெளியான “சாமி 2” படத்திலும் ஒரு இலங்கை வாழ் தமிழராக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
பிரபாகரனின் வாழ்கை வரலாற்று படத்தை ஜி.வெங்கடேஷ் குமார் என்பவர் இயக்கவிருக்கிறார். இவர் மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு “சீறும் புலிகள்” என்று தலைப்பை வைத்துள்ளனர்.