திருமணம் ஆகியும் இன்னொருத்தர் உடன் தொடர்பில் இருந்தேன் – பிரபல நடிகையின் ஷாக்கிங் பேட்டி.

0
885
mumtaj
- Advertisement -

திருமணத்திற்குப் பிறகும் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன் என்று பிரபல நடிகை அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் பழம்பெரும் நடிகை மும்தாஜ் அஸ்காரி. ஈரானில் புகழ் பெற்ற உலர் பழங்கள் விற்பனையாளரான அப்துல் சலீம் அஸ்காரி மற்றும் ஷாதி ஹபீப் ஆகா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர் மும்தாஜ். இவர் பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

-விளம்பரம்-

மேலும், இவரது இளைய சகோதரியும் நடிகை தான். அவரின் பெயர் மல்லிகா. இவர் மல்யுத்த வீரரும் இந்திய நடிகருமான ரந்தாவா என்பவரைத் திருமணம் செய்தார். இவர் மல்யுத்த வீரரும் இந்திய நடிகருமான தாரா சிங்கின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகை மும்தாஜ் அஸ்காரி குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை தொடங்கி இருந்தார். பின் வல்லா கியா பாட் ஹை, ஸ்ட்ரீ மற்றும் செஹ்ரா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மும்தாஜ் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

- Advertisement -

மும்தாஜ் அஸ்காரி திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இவர் புகழ்பெற்ற நடிகர் ராஜேஷ் கண்ணா உடன் பெரும்பாலான படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். இவர் நடிகை மட்டும் இல்லாமல் சிறந்த நடன கலைஞர் மற்றும் அழகுராணி ஆகவே 60,70 காலகட்டங்களில் ஜொலித்துக் கொண்டிருந்தார். அதோடு பாலிவுட்டில் இவர் 1960 மற்றும் 70களில் கொடிகட்டி பறந்து இருந்தார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வெற்றி பெற்றிருந்தது. பின் இடையில் பட வாய்ப்புகள் குறைந்த உடன் திரை உலகிலிருந்து மும்தாஜ் அஸ்காரி விலகி இருந்தார்.

மும்தாஜ் அஸ்காரி கடைசியாக நடித்த படம்:

அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மும்தாஜ் 1990 களில் நடித்து இருந்தார். பின் தனது இறுதி படமான “ஆந்தியான்” படத்திற்காக இவர் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்து இருந்தார். இடையில் மும்தாஜ் அஸ்காரி 1974 ஆம் ஆண்டு தொழிலதிபர் மயூர் மதுவனி என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகு மும்தாஜ் தன் கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

-விளம்பரம்-

மும்தாஜ் அஸ்காரி திருமணம்:

அதில் ஒருவர் நதாஷா. இவர் 2006 ஆம் ஆண்டு நடிகர் ஃபெரோஸ் கானை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மும்தாஜ் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்க விரும்பவில்லை. அதோடு இவரை பல பேர் காதலித்து இருந்தார்கள். அதில் ஷாமி கபூர் இவரை நேசித்து திருமணம் செய்யவும் விரும்பி இருந்தார். இந்த நிலையில் மும்தாஜ் அஸ்காரி சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது.

கள்ளத்தொடர்பு குறித்து மும்தாஜ் அஸ்காரி அளித்த பேட்டி:

இதனால் ஏற்பட்ட மன கஷ்டம் காரணமாக நான் இந்தியா திரும்பினேன். பின் இந்தியாவில் எனக்கும் இன்னொருவருடன் தொடர்பு ஏற்பட்டது. ஆனால், அது தொடர்ந்து நெடுநாள் நீடிக்கவில்லை. விரைவிலேயே முடிந்துவிட்டது. இருந்தாலும் என் கணவர் இப்போதும் என்னை காதலித்து தான் வருகிறார். இந்த வகையில் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Advertisement