ஷாக்கிங் : ஈச்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் .

0
646
- Advertisement -

நடிகர் அஜித்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வந்த அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித் விஜய்க்கு பின்னர் வசூல் சாதனைகளை படைத்தது வருவது இவர் தான் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம்.

-விளம்பரம்-
Police protection for actor Ajith - The Hindu

இந்நிலையில் ஈச்சம்பாக்கத்தில் உள்ள தல அஜித்தின் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக அஜித்தின் வீட்டில் சோதனை செய்துள்ளனர்.ஆனால், இது பொய்யான மிரட்டல் என்பது தெரிவந்துள்ளது.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் வெளியில் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போன் செய்து கூறியுள்ளார். இந்த தகவலை அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சாலி கிராமத்தில் அமைந்துள்ள விஜயின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். ஆனால், வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் வெறும் புரளி என்று தெரியவந்தது.

தற்போது விஜய்யை தொடர்ந்து அஜித்திற்கு இப்படி ஒரு பொய்யான மிரட்டல் வந்துள்ளது. விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தற்போது அஜித், எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை ‘ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகளை கொரோனா பிரச்சனை முடிந்தபின் வைத்துக்கொள்ளலாம் என்று அஜித் ஏற்கனவே படக்குழுவில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-
Advertisement