வடிவேலு எனக்கு உதவி செய்யலனாலும் – சிகிச்சை பின் போண்டா மணி அளித்த பேட்டி.

0
858
bondamani
- Advertisement -

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன போண்டா மணி நடிகர்களுக்கு வைத்திருக்கும் வேண்டுகோள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இவருடைய உண்மையான பெயர் கேதீஸ்வரன். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து இருந்தது. இவர் 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-
bondamani

அதனை தொடர்ந்து இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அதோடு இவர் விஜய், தனுஷ், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். இதுவரை இவர் 270 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் கன்னட பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘தொடரும் மரணங்கள்’ மீண்டும் ஒரு தமிழ் பட நடிகை தற்கொலை. மனதை உருக்கும் கடிதம் எழுதி வைத்து மரணம்

போண்டா மணிக்கு ஏற்பட்ட உடல் ப்ரச்சனை:

இவருடைய மனைவி பெயர் மாதவி. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட விஷவாயுவால் போண்டா மணி பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் நடிகர் போண்டா மணி அவர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். அதோடு இவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து இருக்கிறது.

-விளம்பரம்-

போண்டா மணிக்கு உதவிய அரசு:

இதனை அறிந்த நடிகர் பார்த்திபன் தன்னால் முடிந்த உதவியை போண்டா மணிக்கு செய்து இருந்தார். பின் தீவிர சிகிச்சை பெற்று வந்த போண்டாமணியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்து இருந்தார். பின் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களையும் மருத்துவர்களிடம் கேட்டு அறிந்திருக்கிறார். இதனை அடுத்து போண்டாமணியின் மருத்துவ செலவை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போண்டாமணி:

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி, தனுஷ் உட்பட பல பிரபலங்கள் போண்டாமணிக்கு நிதி உதவி செய்திருக்கின்றனர். அதற்கு போண்டாமணியும் நன்றி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் போண்டாமணி தமிழ் நடிகர்களுக்கு வைத்துள்ள வேண்டுகோள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, போண்டாமணி அவர்கள் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார்.

போண்டாமணி வைத்த கோரிக்கை:

பின் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, நான் ரஜினி, அஜித், விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். விரைவில் எனக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் சினிமா துறையினர் உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன்.வடிவேலு எதுவும் செய்யலன்னாலும் கவலை இல்லை. அவராலதான் உலகுக்கு நான் காமெடியனா தெரிஞ்சேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement