தனது சொத்தை சிங்கள முதலாளிகள் சிலர் கைப்பற்ற முயல்வதாக நடிகர் விஜய் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். சமீபகாலமாக நடிகர் விஜய் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பெயரில் கட்சியை தொடங்குவதாக அறிவிப்பு வெளியானபோது அதனை மறுத்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த பிரச்சனை தொடர்ந்து விஜய் அவரது தந்தையுடன் பேசுவது இல்லை என்று விஜய்யின் அம்மாவான ஷோபா தெரிவித்து இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் தனது மனைவி சங்கீதாவின் உறவினர்கள் மூலமாக 15 வருடங்களுக்கு முன்னர் இலங்கை , கொழும்பு நகரில் வாங்கிய தனது சொத்தை சிங்கள முதலாளிகள் சிலர் கைப்பற்ற முயல்வதாக நடிகர் விஜய் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா ஈழத் தமிழர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய்-சங்கீதா. மேலும்,இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள்.
இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சினிமா துறையில் பிரபலமான இயக்குனரின் மகனாக விஜய் இருந்தாலும் அவருடைய படங்கள் எல்லாம் ஆரம்பத்தில் தோல்வியில் தான் முடிந்தது. பின்னர் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் என்று பார்த்தால் “பூவே உனக்காக” படம் தான்.
இந்த படத்திற்கு பின் தான் விஜய் அவர்களுக்கு சினிமா துறையில் பட வாய்ப்புகள் வர தொடங்கின. பின்னர் விஜய்க்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமும் கூடியது. மேலும்,விஜய்க்கு ரசிகர்கள் மட்டும் இல்லைங்க தீவிர பெண் ரசிகையும் உள்ளார். அதில் ஒருவர்தான் நம்ப சங்கீதா. உறவினர் மூலமாக விஜய்யை சங்கீதா சந்திக்க பின்னர் விஜய்யை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்க இவர்கள் இவரின் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.