அடிங்க, அடிச்சனு வச்சிக்கோ, தொண்டர் மீது பாய்ந்த த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்

0
246
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதை அடுத்து 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. மேலும், விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை.

-விளம்பரம்-

விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. அதோடு விஜய் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இது எல்லாம் அரசியல் வட்டாரத்தில் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பின் அனைவரும் எதிர்பார்த்தபடி விஜய் அரசியலில் களமிறங்குவதை உறுதி செய்து விட்டார்,. அந்த வகையில் சமீபத்தில் விஜய் தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்து தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து இருக்கிறார்.

- Advertisement -

தமிழக வெற்றி கழகம் :

தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து இருக்கிறார் விஜய். இது ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. பின் பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். விஜய் அரசியலுக்கு வருவதை ஒட்டி பலரும் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக அவருடைய கட்சியின் பெயர் கிண்டல் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார்.

புஸ்ஸி ஆனந்த் அறிக்கை:

அதில் அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் நாளை நடைபெற இருக்கிறது. நமது கழகத்தின் மாவட்ட தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து இன்று காலை 9 மணி அளவில் கூட்டம் தொடங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

புஸ்ஸி ஆனந்த் வீடியோ:

அப்போது புஸ்ஸி ஆனந்த் அவர்கள் ரசிகர் ஒருவரை ஏய் அடிங் அடிச்சனா பாத்துக்கோ என்று கோபமாக பேசி அவரை தள்ளிவிட்டு இருக்கிறார். இதற்கு காரணம் அவர் புஸ்ஸி காலில் விழ வந்திருக்கிறார். அதற்கு தான் புஸ்ஸி ஆனந்த் இப்படி நடந்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் விஜய் பார்க்க பார்க்க வந்தாலும் அவர்களை திருப்பி அனுப்புவதாகவும் சரியான பதில் தரவில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். மேலும், விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். இவர் புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான மறைந்த அஷ்ரப்பின் உதவியாளராக பணியாற்றியவர்.

புஸ்ஸி ஆனந்த் குறித்த தகவல்:

பிரமுகருமான இவர் ரியல் எஸ்டேட் பணிகளிலும் ஈடுபட்டு இருந்தார். மேலும், இவர் விஜய்யின் தீவிரமான ரசிகர் ஆவார். பின் புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்ற கவுரவ தலைவராக இருந்தார். அதன்பிறகு தான் புஸ்ஸி ஆனந்த் இடையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் புஸ்சி என்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அதனால் தான் இவர் புஸ்ஸி ஆனந்த் என்று அழைக்கப்பட்டார். இவர் எம்எல்ஏவாக இருந்தாலும் விஜய் மன்ற தலைவராக பணிகளை செய்து வந்தார். அதற்கு பிறகு விஜய்க்கு நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் மாறினார். இதையடுத்து புஸ்ஸி ஆனந்திற்கு அகில இந்திய விஜய் மக்கள் இயக்க அகில பொதுச் செயலாளர் பதவியை விஜய் கொடுத்தார். அதனை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் முழுமையாக விஜய் மக்கள் இயக்க பணியை தற்போது வரை கவனித்து வருகிறார்.

Advertisement