“மனவலிமையில் பிரக்ஞானந்தா ஒரு அசுரன்” இளம் கிராண்ட் மாஸ்டரை பாராட்டிய உலகின் சிறந்த சதுரங்க வீரர் கார்ல்சன்.

0
1281
- Advertisement -

மன வலிமையை பொறுத்த வரைக்கும் இந்திய கிராண்ட் மாஸ்டர்  பிரக்ஞானந்தா ஒரு அசுரன் என்றும் கிளாசிக்கில் மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வலிமையானவர் என்றும் கார்ல்சன் கூறினார். அஜர்பைஜானில் நடைபெற்று வந்த  FIDE உலக சதுரங்க போட்டியானது உலக செஸ் போட்டிகளில் அனைவரது கண்களையும் தமிழ் நாட்டின் பக்கம் திருப்ப வைத்தவர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. அஜர்பைஜானில் தற்போது நடைபெற்ற உலக செஸ் தொடரில் இறுதிப்போட்டியில் கிரான்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.

-விளம்பரம்-

முதல் சுற்று சமனில் முடிந்ததால் 22 அன்று நடைபெற்ற 2 ஆம் சுற்றும் டிராவில் முடிந்ததால் இன்று டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது.பிரக்னந்தா வெற்றி பெற வேண்டும் இந்திய முழுவதும் ஆவலுடன் இருந்து வருகின்றனர். 2022 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இணையதளப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இதன் மூலம் கார்ல்சனை வீழ்த்திய 3-வது இந்திய வீரராக மாறினார் பிரக்ஞானந்தா. 21 அன்று போட்டியில் வெள்ளை நிற காய்களை கொண்டு களமிறங்கிய பிரக்ஞானந்தா, 21 அன்று போட்டியில் சற்று முன்னிலையில் இருந்து வந்தார்.

- Advertisement -

35 வது நகர்வுக்கு பின் போட்டி கடினமாக்க விரும்பாத இருவரும் ஒப்புக்கொண்டு சமன் செய்தனர். அதன் படி இன்று நடைபெற்ற டைபிரேக்கர் போட்டியானது இரண்டு சுற்றுகளாக நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா கார்ல்சன் தோல்வியை தழுவினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா கால்சென்னுக்கு சவால் கொடுத்தார்.

இருந்தும் போராடிய அவரால் முதல் சுற்றில் வெற்றி பெற முடியவில்லை. 2-வது சுற்றிலும் கார்ல்சன் வெற்றி பெற, உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இந்தத் தொடரில் ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா 2-ம் இடம் பிடித்தார். 3-வது இடத்தை ஃபேபியானோ கருனா பிடித்தார். இளம் கிரான்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை உலக சதுரங்க போட்டியின் சாம்பியன் கார்ல்சன் பாராட்டியுள்ளார்.

-விளம்பரம்-

கார்ல்சன் கூறியது.

தற்போது நடைபெற்ற முடிந்த உலக கோப்பைத் தொடரில் வாசில் இவான்சுக் மற்றும் மூன்று இளம் வீரர்களிடம் விளையாடினேன் இவர்கள் உண்மையில் வலுவான வீரர்கள் தான். குகேஷுக்கு எதிராக விளையாடும் போது அவரிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை உணர்ந்தேன். மற்றவர்களை பொருத்தவரை அவர்கள் மிகவும் இனிமையானவர்கள் இல்லை எனில் போட்டி மிக கடினமாக இருந்திருக்கும்.  ஜெர்மனியின் வீர என்னை மிகவும் கடினமான நிலைக்கு தள்ளினார் அவர் என்னை வெளியேற்றுவதற்கு ஒரு நபர் இருந்தார்.  தற்போது மிகவும் வலிமையான கிளாசிக் வீரராக குகேஷ் இருந்து வருகிறார்.

பிரக்ஞானந்தா மற்றும் நோடிர்பெக்  இந்த இருவர்களும் மிகவும் வலிமையானவர்களே. இந்த இருவர்களும் மனவலிமையில் அரக்கர்கள்.  ஆனால் நான் நினைப்பது என்னவென்றால்  எதிர்காலத்தில் சதுரங்கம் நல்ல கைகளில் இருக்கும் என்று தெளிவாக தெரிகிறது. 1990 முதல் 1994 இல் பிறந்த வீரர்களின் தலைமுறை உண்மையிலேயே ஆதிக்கம் செலுத்தியது ஆனால் இப்போது 2003-ல் பிறந்த இந்த இளைஞர்களால் எங்களுக்கு பிறகு எங்களுக்கு தகுதியான ஒரு தலைமுறை உள்ளது என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கார்ல்சன் கூறினார்.

Advertisement