பொதுவாக தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்கள் போலவே நடிகர் விஜய்க்கு கேரளாவிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனால் விஜய் படங்கள் என்றாலே அங்கு ஒரு தனி மாஸ் தான்.ஆனால், சர்கார் திரைப்படம் கேரளாவில் மிகுந்த சறுக்களை சந்தித்தது.
உலகளவில் பல சாதனைகளை படைத்த சர்கார் கேரளவில் 3 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தற்போது அதைவிட அதிர்ச்சி செய்தியாக நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சர்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்று போஸ்டர் ஒட்டியதால் ஒரு சில அமைப்பினர் விஜய் மற்றும் படக்குழுவினர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்களாம்.இதனால் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.




