அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பணம் முறைகேடு செய்த செந்தில் பாலாஜி. குற்றபத்திரிக்கை கூறுவது என்ன ?

0
524
- Advertisement -

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கின் குற்றபத்திறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. செப்டம்பர் 15வரை நீதி மன்ற காவலை நீடித்து சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் தரப்பு ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி முத்த வழக்கறிஞர் இளங்கோவன் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். அதற்க்கு முதன்மை அமர்வு நீதி மன்றம் ஜாமீன் குறித்து கூறியுள்ளது.

-விளம்பரம்-

அமைச்சரின் வழக்கு:

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக ஏமாற்றி விட்டார் என சில பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை கைது செய்த நிலையில் அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு வெவ்வேறு தீர்ப்பினை வழங்க வழக்கு மூன்றாவது நீதிபதிகள் அமர்வுக்கு சென்றது.

- Advertisement -

மூன்றாவது அமர்வு அவர் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு தான் என்றும் அவர் குணமடைந்த பிறகே அவரை விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கின. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு: சிறையில் இருந்து அமலாக்க துறையினரால் நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனிற்கு அவரை விசாரனைக்காக அவரை அழைத்து சென்றது. அவரிடம் விசாரணை ஆரம்பித்தது தகவல்கள் தெறிவிக்கின்றன.

மேலும் அவருக்கு இரண்டு முறை மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்ற பத்திரிகை மற்றும் 2700 ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு:

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதி மன்ற காவல் நிறைவடைந்த நிலையில் அவரை எம்.பி எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்திற்கு நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு மேலும் செப்டம்பர் 15வரை நீதி மன்ற காவலை நீடித்து சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் தரப்பு ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி முத்த வழக்கறிஞர் இளங்கோவன் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

நேற்று அளிக்க பட்டதீர்ப்பில் மேலும் அதற்க்கு அந்த மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என்றும் இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் அணுகும் படியும் அவருக்கு தெரிவிக்கபட்டுள்ளது. அந்த வழக்கானது இன்று முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அதற்க்கு அவர் இந்த ஜாமீன் வழக்கை எம்.பி எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்கலாம் என்று தீர்ப்பை வழங்கியுள்ளார்.  

குற்றப் பத்திரிக்கை:

 ‘அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர் பண மோசடி குற்றத்தைச் செய்திருக்கிறார் என்பது தெரிகிறது . தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஊழல் மற்றும் சட்டவிரோதமான வழிகளில் பணப் பலன்களைப் பெற்று, செய்த குற்றத்தின் காரணமாக நேரடியாக வருமானத்தைப் பெற்றிருக்கிறார். மேலும் அதில் எவ்வளவு பணம் வசூல் ஆகிறது மற்றும் பணம் தராவதர்களுக்கு குறித்தும் செந்தில் பாலாஜி, அவரின் உதவியாளர்கள் சண்முகம், கார்த்திகேயன், போக்குவரத்து அதிகாரிகளிடையே நடந்த இ-மெயில் ஆதாரங்கள் தற்போது கிடைத்திருக்கின்றன. மேலும் எச்செல் ஷீட்டில் பணம் வாங்கியது பற்றி தகவல் இருக்கிறது.

சில சந்தேகதுக்கிறிய நபர்கள், செந்தில் பாலாஜிக்கும், அரசு வேலை கேட்டவர்களுக்கும் இடைத்தரர்களாக இருந்திருக்கின்றனர். பணம் அமைச்சரின் உதவியாளர் சண்முகத்தின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்திருக்கின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில், ரொக்க வைப்புத் தொகை மொத்தம் 2013-14 நிதியாண்டு முதல் 2021-22 நிதியாண்டு வரை ரூ.1.34 கோடி எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், அவரின் மனைவி மேகலா, 2014-15 நிதியாண்டு முதல் 2019-20 நிதியாண்டு வரை ரூ.29.55 லட்சம் ரொக்க வைப்புத் தொகையை வைத்திருக்கிறார்’ என்று விளக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

Advertisement