மன்சூர் அலிகான், திரிஷா மான நஷ்ட வழக்கு – கடுப்பாகி சென்னை நீதிமன்றம் விட்டுள்ள டோஸ்

0
462
- Advertisement -

திரிஷா மீது மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கில் நீதிபதி வெளுத்து வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் மன்சூர் அலிகான்-திரிஷா குறித்த சர்ச்சை தான் ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான், லியோ படத்தில் பலாத்கார காட்சிகள் இல்லை. படத்தில் நானும் திரிஷாவும் இருக்கிறோம். லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம்.

-விளம்பரம்-

அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு, ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால், இங்கே அப்படி காட்சி இல்லை. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று கூறி இருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பின் நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். பின் இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று செய்து கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

மன்சூர் அலிகான் மீது புகார்:

இதனை அடுத்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக மன்சூர் அலிகான் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தார்கள். பின் விசாரணையில் மன்சூர் அலிகான் தன்னுடைய தரப்பு நியாயத்தை கூறியிருக்கிறார். அதன் பின் பேட்டியில் மன்சூர் அலிகான், உடல்நிலை சரியில்லை என்றாலும் நான் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறேன். முன் ஜாமின் வாங்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றிருக்கிறேன்.

மன்சூர் அலிகான் அளித்த பேட்டி:

பயந்து போய் தலைமறைவாகும் ஆள் நான் இல்லை. நான் திரிஷா என்பவரை பற்றி தனிப்பட்ட முறையில் பேசவில்லை. ஒரு நடிகையாக அவரை நான் மிகவும் மதிக்கிறேன். என்னை பழிவாங்கும் நோக்கில் தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது என்று கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதனை அடுத்து மன்சூர் அலிகான் அவர்கள் மன்னித்துவிடு என்ற ஒரு அறிக்கையும் வெளியிட்டு இருந்தார். இதனால் இந்த விவகாரம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று நினைக்கப்பட்டு இருக்கும் நிலையில் மீண்டும் மன்சூர் அலிகான் பதிவிட்டு இருக்கும் பதிவுதான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

மீண்டும் சர்ச்சை கிளப்பிய மன்சூர்:

அதாவது, மரணித்து விடு என்ற வார்த்தையை தான் நான் கூறினேன். பிஆர்ஓ அப்படி அச்சடித்து விட்டார் என்று சொன்னார். பின் இவர் பத்திரிகையாளர்களை சந்தித்து, நான் என்ன பேசினேன் என்பதை தெரிந்து கொள்ளாமல் யாரோ என்னை தவறாக சித்தரிக்கும் விதத்தில் இப்படி ஒரு வீடியோவை எடிட் செய்து போட்டு இருக்கிறார்கள். என் மீது வீண்பழி சுமத்திய திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இதனை அடுத்து மன்சூர் அலிகான், திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் மீது ஒரு கோடி ரூபாய் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து இருந்தார்.

வெளுத்து வாங்கிய நீதிபதி:

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது நீதிபதி, நீங்கள் இப்படி பேசியதற்காக திரிஷா தான் வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். பொதுவெளியில் எப்படி நடந்து கொள்வது? என்பதை மன்சூர் அலிகான் உணர வேண்டும். அது மட்டும் இல்லாமல் நடிகர்களைப் போல இளைஞர்கள் ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில் பொதுவெளியில் இப்படி நீங்கள் நடந்து கொள்ளலாமா? என்று சொல்கிறார். அதற்கு மன்சூர், நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொன்னவுடன் மன்சூர் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்டாரா என்று நீதிபதி கேள்வி கேட்டாரா? என்ற கேள்வி நீதிபதி எழுப்பி திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோரிடம் இருந்து விளக்கம் கேட்க இந்த விசாரணை 22ஆம் தேதிக்கு ஓத்திவைக்கிறேன் என்று கூறிட்டார்.

Advertisement