பிரபல டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் ஆண்டு தொடரும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக உள்ள டாப் 15 பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் சீரியல் நடிகைகள் மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் முதல் இடத்திலும், விஜய் டிவி தொகுப்பாளினியாக டிடி இரண்டாவது இடத்திலும், தெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த யாஷிகா ஆனந்த் அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு கிடைத்த பிரபலம் தான் இன்று அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இந்த பட்டியலில் முழு விவரத்தை தற்போது காணலாம்.
- யாஷிகா ஆனந்த்
- திவ்யா தர்ஷினி (டிடி)
- வாணி போஜன்
- நக்ஷத்ரா நாகேஷ்
- சரண்யா சுந்தராஜ்
- கிகி விஜய்
- சைத்ரா ரெட்டி
- பாவனா பாலகிருஷ்ணன்
- ஆல்யா மானஸா
- ஸ்ரேயா அஞ்சன்