என் கணவர் ரொம்ப நல்லவர்.! காதல் திருமணம்.! இடது கை உடைந்த சம்பவம்.! அபிராமி பகிர் வாக்குமூலம்..!

0
4264
Abirami
- Advertisement -

சென்னை குன்றத்தூர் பகுதியில் பெற்ற குழந்தைகளைக் கொலை செய்த தாய் அபிராமி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் அதிர்ச்சியூட்டும் பல பின்னணி தகவல்கள் இருப்பதாக போலீஸாரும் மனநல மருத்துவரும் தெரிவித்தனர்.

-விளம்பரம்-

sundharama and abirami

- Advertisement -

காதல் திருமணம்:

சென்னை குன்றத்தூர், மூன்றாம் கட்டளையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர் விஜய். தனியார் வங்கியில் பணியாற்றுகிறார். இவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தன. இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலில் தூக்க மாத்திரைகள் கொடுத்து கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் கொண்ட தனிப்படை போலீஸார் அபிராமியைத் தேடினர். அவரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சென்னையில் உள்ள ஹோட்டலில் வரவேற்பாளராக அபிராமி பணியாற்றினார். அந்த ஹோட்டலில் கடலூரைச் சேர்ந்த விஜய் வேலைபார்த்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பிறகு இருவீட்டினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். வரவேற்பாளராக அபிராமி பணியாற்றியதால் மேக்- அப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அடிக்கடி அழகு நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

-விளம்பரம்-

சுந்தரம்

மூன்று பேருக்கு ஸ்கெட்ச்

திருமணத்துக்குப் பிறகு அபிராமி வேலைக்குச் செல்லவில்லை. விஜய் மட்டும் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். மகன் அஜயை மட்டும் தினமும் ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்துச் செல்வார் அபிராமி. அப்போது கார்னிகாவை, வீட்டு உரிமையாளர் வீட்டில் விட்டுச் செல்வார். அவர்களும் கார்னிகாவை அன்பாகப் பார்த்துக்கொள்வார்கள். வார விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் விஜய் வெளியில் செல்வது வழக்கம். அப்போது, பிரியாணி கடைக்குச் செல்வார். அந்தக் கடையில் சுந்தரம் என்பவர் வேலை பார்த்துள்ளார். அவருக்கும் அபிராமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Ajay

தங்களுக்குத் திருமணமாகியதை இருவரும் மறந்து நெருங்கிப் பழகியுள்ளனர். அதை இருவீட்டினரும் கண்டித்துள்ளனர். இதனால், அபிராமியும் சுந்தரமும் சென்னையைவிட்டு கேரளாவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்கு இடையூறாக இருந்த குழந்தைகள் அஜய், கார்னிகா, கணவர் விஜய் ஆகியோரை கொலை செய்ய அபிராமி திட்டமிட்டார். அதற்காக குன்றத்தூரில் உள்ள மருந்துக் கடையில் தூக்க மாத்திரைகளை வாங்கிய அபிராமி, அதைப் பாலில் கலந்து மூன்று பேருக்கும் இரவு கொடுத்துள்ளார். இதில் கார்னிகா மட்டும் இறந்துவிட்டார். அஜய், விஜய் ஆகியோர் காலையில் எழுந்துள்ளனர். அதைப்பார்த்து அபிராமி அதிர்ச்சியடைந்தாலும் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

வழக்கம்போல விஜய், வேலைக்குச் சென்றுவிட்டார். இதனால் அஜய்க்கு மீண்டும் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார் அபிராமி. அதில் அஜய் இறந்துவிட்டார். இதையடுத்து ஸ்கூட்டியில் வீட்டிலிருந்து கோயம்பேடுக்குப் புறப்பட்டுள்ளார். பிறகு, பணம் இல்லாததால் கோயம்பேடு பகுதியில் உள்ள அடகுக்கடையில் தாலியை விற்றுள்ளார். அந்தப் பணத்தில் கேரளாவுக்கு அவர் செல்ல பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது அங்கு வந்த போலீஸார் அவரைப் பிடித்துள்ளனர். இதற்கிடையில் சுந்தரத்தை போலீஸார் பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடினார். அதில் அவரின் இடது கை உடைந்தது. இந்தக் கொலை சம்பவத்துக்குக் காரணமான அபிராமி, சுந்தரம் ஆகியோரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

sundharam

சிக்கியது எப்படி?

இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் போலீஸார் அபிராமியைத் தேடினர். அப்போதுதான் சுந்தரம் குறித்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. போலீஸாரின் கட்டுப்பாட்டில் சுந்தரத்தைக் கொண்டு வந்தனர். இந்தச் சமயத்தில் சுந்தரத்துக்கு அபிராமி `நீங்கள் சொன்ன இடத்துக்கு நான் வந்துவிட்டேன். நீங்கள் எப்போது வருவீர்கள்’ என்று பேசியுள்ளார். உடனே அந்த செல்நம்பரின் சிக்னலை போலீஸார் ஆய்வு செய்தபோது அது, கோயம்பேடு என்று காட்டியது. உடனே அங்கு சென்ற போலீஸார் அபிராமியைக் கைது செய்துவிட்டனர். தன்னை போலீஸார் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று கருதிய அபிராமி, தன்னுடைய சிம்கார்டை உடைத்துப்போட்டுள்ளார். புதிய சிம்கார்டு வாங்க அவரிடம் ஆதார்கார்டு இல்லை. இதனால்தான் வேறு ஒரு நம்பரில் அவர் சுந்தரத்துக்கு போன் செய்துள்ளார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் அபிராமி பைக்கில் செல்லும் சிசிடிவி காட்சிகளும் போலீஸுக்குக் கிடைத்ததே அவரை கண்டுபிடிக்க உதவியாக இருந்தது. அபிராமியை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தாலும், அவரை நாகர்கோவில்தான் கைது செய்துள்ளது போலீஸ் டீம்.

தப்பிச் செல்லும் அபிராமி..

கணவர் விஜய் குறித்து அபிராமியிடம் விசாரித்தபோது `அவர் ரொம்ப நல்லவர். நான்தான் தவறு செய்துவிட்டேன்’ என்று கூறியிருக்கிறார். சுந்தரத்திடம் போலீஸார் விசாரித்தபோது, `குழந்தைகளை கொலை செய்ய நான் கூறவில்லை’ என்று தெரிவித்துள்ளார். பிரேதப் டாக்டர் ஜனனிபரிசோதனை முடிந்து இரண்டு குழந்தைகளின் சடலங்களும் விஜய்யிடம் ஒப்படைக்கப்பட்டன. அதைப்பார்த்து அவர் மற்றும் அவரின் உறவினர்கள் கதறி அழுதனர்.

abhi

மனசாட்சி

இதுகுறித்து மனநல மருத்துவர் ஜனனி ரெக்ஸிடம் பேசினோம், “பெற்ற குழந்தைகளைக் கொலை செய்யும் அளவுக்கு ஒரு பெண் துணிந்துள்ளார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதலில் அபிராமி தன்னுடைய பொறுப்புகளை மறந்துவிட்டதே இதற்குக் காரணம். அபிராமி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய், விஜய்க்கு மனைவி என்பதை உணர்ந்திருந்தால் இந்தத் தவற்றை அவர் செய்திருக்க மாட்டார். அவரின் மனசாட்சியை சாகடித்துவிட்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகும் அவரால் நிம்மதியாக வாழ முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

இன்றைய காலகட்டத்தில் எல்லாமே சுலபமாகக் கிடைக்கின்றன. கட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டும். சில சினிமாப் படங்களில்தான் நல்ல கருத்துகள் உள்ளன. ஆனால், மற்ற படங்களைப் பார்த்து அதன்படி நிஜத்திலும் வாழ முடியும் எனப் பலர் கருதுகின்றனர். ஒரு நிமிடம் யோசித்தால் தவறுகளை தள்ளிபோட முடியும். அபிராமி வழக்கில் கணவனும் மனைவியும் வெளிப்படையாகப் பேசியிருந்தால் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருக்கலாம்” என்றார்.

Advertisement