மாணவர்களுக்காக தாமு செய்வது தவறா? கடும் விமர்சனத்தை முன்வைத்த குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர்.

0
352
- Advertisement -

தன்னை குறித்த விமர்சனத்திற்கு நடிகர் தாமு கொடுத்திருக்கும் பதிலடிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காமெடி நடிகரான தாமு மறைந்த குடியரசு தலைவரின் சிறந்த மாணவன் என்றும் கூறலாம். அப்துல் கலாமின் சிந்தனைகளை மட்டுமல்ல செயல்களையும் ‘லீட் இந்தியா ‘ என்ற அமைப்பின் மூலம் மாணவர்களிடன் கொண்டு சென்று அப்துல் கலாம் கனவை நினைவாக்கி வருகிறார். காமெடி நடிகரான தாமு எண்ணெற்ற படங்களில் பல முன்னனி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். ஆனால் சமீப காலமாக இவரை திரைப்படங்களில் பெரிதாக காண முடிவதில்லை. இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரி சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதிலும் இவர் பேசும் பேச்சுக்களை கேட்டு மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களே கண்கலங்கி அழுகிறார்கள்.

-விளம்பரம்-

தாமுவின் இந்த பேச்சுக்களுக்கு ஆதரவு ஒரு பெரும் வந்தாலும் அதே போல மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்காமல் அவர்களை ஏதோ குற்றவாளிகளை போல அழவைத்து பார்ப்பது அவர்களின் மனநிலை கெடுக்கும் என்று ஒரு சிலரும் விமர்சனம் செய்தான் வருகிறார்கள். அந்த வகையில் குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர் தேவநேயன் அரசு இது குறித்து பேசி உள்ளதாவது நடிகர் தாமு அவர்களே குழந்தைகளை கொடுமைப்படுத்தாதீர்கள்.

- Advertisement -

இப்படியான வீடியோக்களை ஊடகங்களும் வெளியிட வேண்டாம். இவை குழந்தைகளின் உரிமைகளுக்கும், மாண்பிற்கும் எதிரானது மற்றும் குழந்தைகளின் சிறந்த நலனுக்கும் எதிரானது குழந்தைகளை அழ வைப்பது என்பது குழந்தைகளை துன்புறுத்தும் செயலாகும். இது சட்டப்படி குற்றமும் கூட குழந்தைகளை அறிவுத்தளத்தில் அணுகுங்கள் உணர்ச்சித் தளத்தில் அணுகாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே தன் மீதான விமர்சனம் குறித்து பேசிய தாமு ‘கடந்த 12 வருடமாக நான் மாணவர்களை சந்தித்து தன்னம்பிக்கை கொடுத்துக் கொண்டு வருகிறேன். இதுவரைக்கும் என் நிகழ்ச்சியை யாருமே விமர்சித்தது கிடையாது. பள்ளிக்கு நான் வெறும் மோட்டிவேட்டாக மட்டும் போகவில்லை.ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தூதுவராக தான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆசிரியர், பெற்றோர்களின் மகத்துவத்தை மாணவர்களுக்கு புரிய வைக்கிறேன். பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்லது தான் நினைப்பார்கள். நல்லது தான் சொல்வார்கள்.

-விளம்பரம்-

ஆனால், பிள்ளைகள் பெற்றவர்கள் பேச்சை கேட்பதில்லை. அதேபோல் ஆசிரியர்களையும் உதாசீனப் படுத்துகிறார்கள். இதெல்லாம் தப்பு என்பதை தான் நான் மாணவர்களுக்கு உணர வைக்கிறேன். அவர்களும் உணர்ந்து புதிதாக பிறக்கிறார்கள். குழந்தைகள் பிறக்கும்போது அழ தானே செய்வார்கள். அப்படித்தான் மாணவர்களும் தங்கள் தவறை உணர்ந்து புதுசாக பிறக்கும்போது அழுகிறார்கள்.இன்னும் சொல்ல போனால் பெற்றோர் இல்லாமல் நான் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை.

ஆசிரியர்களும் பெற்றோர்களும் இருந்தால் மட்டும்தான் பேசுகிறேன். உங்கள் பேச்சை கேட்டதிலிருந்து என் பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள். ஆளே மாறி விட்டார்கள் என்று பல பெற்றோர்கள் மனநிறைவாக சொல்லியிருக்கிறார்கள். என் பேச்சில் ஏதாவது குற்றம் இருந்தால் அவர்கள் எப்படி என்னை ஆதரிப்பார்கள்? ஏதாவது தப்பு இருந்தால் காவல்துறை என்னை நிகழ்ச்சி நடத்த கூப்பிடுமா? போதை பொருள்களை எதிர்த்து நிகழ்த்தி ஏற்பாடு பண்ணுங்க என்று அரசு தான் சொல்லுமா? இந்த விஷயத்தை யார் செய்தாலும் பாராட்டுவேன் என்று கூறி இருந்தார்.

Advertisement