அன்று சின்மயி பேசியதை கேலி செய்த ஷர்மிகா – சரியான நேரத்தில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய சின்மயி.

0
551
chinmayi
- Advertisement -

சமீபத்தில் தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியில் மருத்தவ இணை இயக்குனர் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் மருத்தவ நெறிமுறைகளை மீறி டாக்டர் ஷர்மிகா யூடியூபிலும் இன்ஸ்டாகிராமில் விடீயோக்களை பதிவிட்டு வருவதினால் யாராவது ஒருவர் அவரின் மீது வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அதற்கு முதன் முறையாக பதிலத்துள்ளார் டாக்டர் ஷர்மிகா.

-விளம்பரம்-

சமீபத்தில் அவர் பிரபல ஊடகத்திற்கு கொடுத்திருந்த பேட்டியில் அவர் கூறியதாவது `நான் எல்லோருக்கும் சித்த மருத்துவம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படி செய்து வருகிறேன். நான் சென்னையில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லுரியில் பி.எஸ்.எம்.எஸ் என்ற மருத்துவ படிப்பை படித்து சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமணையில் சித்தமருத்துவ கவுன்சிலில் பதிவும் செய்துள்ளேன். நான் என்ன படித்தேனோ அதை தான் நான் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறேன் என்று கூறினார்.

- Advertisement -

அதே போல மாட்டு இறைச்சியால் பல விதமான நோய்கள் வரும் என்று தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள “நோயில்லா நெறி” புத்தகத்தில் இருந்தது. அதை வைத்துதான் உடல் உழைப்பு உள்ளவர்கள் ஆடு, மாடு போன்றவற்றை சாப்பிடலாம் ஆனால் பலர் அமர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். அதனால் தான் நான் மாட்டுக்கறி சாப்பிட கூடாது என்று கூறினேன். ஆனால் அதற்கு என்னை பாஜகவுடன் தொடர்பு படுத்தி ஏன் பேசவேண்டும்? என்று கூறினார்.

சித்த மருத்துவர் ஷர்மிகா அவர்கள் வீடியோ ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், கெமிக்கல் சார்ந்த பொருள்களை அதிகமாக தோல், முடிக்கு பயன்படுத்தக் கூடாது. உதாரணத்திற்கு ஷாம்புகளை எல்லாம் பயன்படுத்தக் கூடாது. ஆர்கானிக் சித்த பொருட்களை பயன்படுத்துங்கள். நாம் உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் உணவு பொருட்கள் மாதிரி தான் உடம்பிற்கு வெளியே எடுத்துக் கொள்ள வேண்டும். ஷாம்பூ போன்ற கெமிக்கல் பொருட்கள் பல விளைவுகளை உடம்பில் ஏற்படுத்தும் என்று கூறி இருந்தார். இதை பார்த்த சின்மயி அவர்கள், குடிக்கும் தண்ணீர் கூட தான் கெமிக்கல்.

-விளம்பரம்-

சின்மயி வீடியோ:

அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியுமா? என்று கிண்டல் கேலி செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது குறித்து டாக்டர் ஷர்மிகாவிடம் பேட்டி ஒன்றும் எடுக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருந்தது, பாடகி சின்மயி நான் சொன்னதை தவறாக புரிந்து இருக்கிறார். அவர்கள் சொன்ன மாதிரி தண்ணீர் கெமிக்கல் தான். இருந்தாலும், ஷாம்பூ போன்ற தீங்கு விளைவிக்க கூடிய பொருளுக்கும் சாதாரண கெமிக்கலுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது. எல்லோருக்கும் சொல்வதற்கு கருத்து உண்டு. ஆனால், சொல்லும் விதம் ஒன்று இருக்கிறது. அவர்கள் சொன்னதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.

நெட்டிசன்கள் கண்டனம்:

ஆனால், அதை கிண்டல் கேலி செய்யும் விதமாக சொன்னது தான் எனக்கு இரிடேட்டிங்காக இருந்தது என்று கூறியிருந்தார். இதனை அடுத்து தொகுப்பாளர் அவரிடம் பல பிரபலங்கள் நிறைய கெமிக்கல் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இதற்காக அவர் சொல்லி இருப்பாரா? என்று கேட்டதற்கு அவர் எந்த நோக்கில் சொன்னார் என்று தெரியவில்லை. எனக்கு அத பத்தி எல்லாம் தெரியாது என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் ஷர்மிகா சமீபத்தில் அளித்த சில பேட்டிகள் சர்ச்சையானது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பேசி இருக்கும் சின்மயி கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் ஒரு ரியாக்ஷன் வீடியோ அப்லோட் செய்திருந்தேன். நமது தோலே பெரிய வாய், அதில் கெமிக்கல்களை போடக் கூடாது. ஷாம்பூ போடக் கூடாது ரத்தத்தில் கலந்து விடும் என ஷர்மிகா பேசியிருந்தார்.

அவரை அப்போது நான் விமர்சித்த போது என்னை மிக மோசமாக விமர்சித்தார்கள், ஆனால் இப்போது பலரும் அவரது வீடியோக்களை எடுத்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். நான் ஷர்மிகாவை விமர்சித்த போது நான் ஏதோ பாவம் செய்துவிட்டது போல் என்னைத் திட்டினார்கள். நான் சமீபத்தில் ஷர்மிகாவின் இன்னொரு வீடியோவை பார்த்தேன். அதில் குழந்தை பிறப்பது நல்லவர்களுக்கு மட்டும்தான் என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்திருந்தார்.

Advertisement