சின்மயி ஒரு Arnold Schwarzenegger – கர்ப காலத்தில் சின்மயி எதிர்கொண்ட விஷயத்தை கூறி நெகிழ்ச்சி அடைந்த அவரின் கணவர்.

0
881
chinmayi
- Advertisement -

சமீபத்தில் இரட்டை குழந்தைக்கு தாயான சின்மயி, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார் என்ற விமர்சங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது சின்மயின் கணவர் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். பின்னணி பாடகி சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராகுல் வேறு யாரும் இல்லை 2010 ஆம் ஆண்டு வெளியான மாசுகோவின் காவேரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தான். மேலும், இவர் நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் இயக்குனர் ஆவார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு என்று பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த எந்த படமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றியடையவில்லை. மேலும், இவர் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மன்மதடு 2 என்ற படத்தை இயக்கி இருந்தார். இதில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்து இருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாரா ? :

ராகுல் – சின்மயி தம்பதிக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாமல் தான் இருந்து வந்தது. அதே போல பாடகி சின்மயியும் வயதாகி கொண்டே போனதால் இவருக்கு குழந்தை இல்லாததை வைத்து பல முறை இவரை சமூக வலைதளத்தில் கேலிகள் கூட செய்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் சின்மயிக்கு டபுள் சந்தோசமாக Twins குழந்தைகள் பிறந்துள்ளது. ஏற்கனவே, சின்மயிக்கு 37 வயது ஆகிறது இதனால் சின்மயி Surrogacy மூலம் அதாவது வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்று இருப்பார் என்று விமர்சனங்களுக்கு எழுந்து இருக்கிறது.

சின்மயி விளக்கம் :

இப்படி ஒரு நிலையில் இது குறித்து விளக்கம் ஒன்றை அளித்து இருந்தார். அதில் ”நான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிடாததால் நிறைய பேர் எனக்கு Dm மூலம் மெசேஜ் செய்து நான் வாடகை தாய் மூலம் தான் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தேனா என்று கேள்விகளை கேட்டு வருகின்றனர். என்னை பாதுகாத்துகொள்ள எனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும்.

-விளம்பரம்-

கற்பமானதை சொல்லாத காரணம் :

நான் இப்போதும் எப்போதும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதுகாத்து தான் வைப்பேன்.ன்னுடைய குடும்பம், நண்பர்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படக்களை சமூக வலைதளத்தில் பதிவிட மாட்டேன். அதை பற்றி தெரியவேண்டும் என்றால் நான் என் குழந்தை பிறக்கும் போது எனக்கு சிசேரியன் செய்த போது பஜனை பாடி இருப்பேன். அதை வேண்டுமானால் பின்னர் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், இப்போதைக்கு இதுவே போதும் என்று கூறி இருந்தார்.

சின்மயி கணவர் பதிலடி :

இப்படி ஒரு நிலையில் சின்மயி கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசியுள்ள அவரது கணவர் ‘ சின்மயி ஒரு ஆர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் போன்றவர. கடந்த 10 மாதங்களாக, குறிப்பாக கடைசி 10 நாட்கள், அவர் மிகுவம் அருமையாக கையாண்டார். இது எங்களின் ஒரு அழகிய பாளையம். தன் குழந்தைக்கு தாய் பால் கொடுத்ப்பதை பார்ப்பதை வார்தைகளால் சொல்ல முடியாது’ என்று கூறியுள்ளார்.

Advertisement