அப்போ மாயா, அர்ச்சனாவை Bully பண்ணும் போதும், பிரதீப் மீது பொய்யான அவதூறு சொன்ன போது என்ன பண்ணீங்க – நெட்டிசன் கேள்விக்கு சின்மயி பதில்.

0
480
- Advertisement -

கமல் குறித்து புகழ் மற்றும் குரேஷி கேலி செய்து பேசியது குறித்து சின்மயி கொந்தளித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்றோடு நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் எத்தனையோ போட்டியாளர்கள் கலந்துகொண்டாலும் இந்த சீசனில் அதிகம் சர்ச்சைக்குள் சிக்கிய போட்டியாளர் என்றால் அது மாயா தான்.

-விளம்பரம்-

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த லியோ படத்தில் சில காட்சியில் நடித்திருந்தார். இந்த சீசனில் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு போட்டியாளர்கள் என்றால் அதில் டாப் மூன்று இடத்தில் மாயாவிற்கு தான் முதலிடம். இவர் பல முறை நாமினினேட் ஆன போது இவர் நிட்சயம் வெளியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால், ஒவ்வொரு வாரமும் இவர் தப்பித்துக்கொண்டே வந்து தற்போது இறுதி கட்டம் வரை வந்துவிட்டார். மாயா இப்படி இறுதி வரை வர காரணம் கமல் தான் என்று சமூக வலைதளத்தில் அடிக்கடி கமல் கேலிக்கு உள்ளானார். இப்படி ஒரு நிலையில் மாயாவிற்கு கமல் எந்த அளவிற்கு ஆதரவு தெரிவித்து வருவதை கலாய்க்கும் விதமாக சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் புகழும் குரேஷியும் கலாய்த்து உள்ளனர்.

இதில் குரேஷி கமல் போல் மிமிக்கிரி செய்ய, புகழ் ஒவ்வொரு கேள்வியாக கேட்கிறார். உங்களுக்கு சென்னையில் பிடித்த இடம் என்ன என்று கேட்டால் மாயாஜால் என கூறுகிறார். பிடித்த படம் மாயாபஜார், தமிழ்நாட்டில் பிடித்த இடம் மாயவரம் என கூறுகிறார். இப்படி கமல் ஹாசன் மாயாவையும் வைத்து ட்ரோல் செய்யும் விதமாக புகழ் குரேஷி பேசிய தற்போது வைரலாகி வந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து புகழ் மற்றும் குரேஷி இருவரும் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து சின்மயி தனது பங்கிற்கு கருத்து தெரிவித்து இருந்தார். அதில் ‘என்ன இது? ஒரே ஒரு ரியாலிட்டி ஷோ தான். ஒரு பெண்ணை அவதூறாக பேசலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் புறணி பேசிக்கொள்வதும், அவதூராகவும் பேசுகின்றனர்’ என்று கூறியுள்ளார்.

சின்மயின் இந்த பதிவிற்கு நெட்டிசன் ஒருவர் ‘மாயா அர்ச்சனாவை Bully பண்ண போது எங்கு போனீர்கள்? பிரதீப் மீது பொய்யாக பழி போட்ட போது எங்கு போனீங்க? மாயாவை எதிர்ப்பதும் நாங்கள் தான் அர்ச்சனாவிற்கு ஆதரவு கொடுப்பதும் நாங்கள் தான இதில் Gender ஒன்றும் இல்லை ‘ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலா அளித்த சின்மயி ‘ டிவி ஷோவில் எந்த கேரக்டரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம். வெறித்தனமாக இருங்கள், விவாதிக்கவும், வாக்களிக்கவும், நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். கேரக்டர் அவதூறு என்பது பயங்கரமான ஒன்று, அழுகிய மனங்களின் துண்டுகள் பதிலடியாகச் செய்கின்றன.

ஆம். இது பாலினம் பற்றியது. பல பங்குதாரர்கள் / விவகாரங்கள் / விவாகரத்துகள் கொண்ட ஒரு மனிதன் ஒரு வீரன். அத்தகைய ஆண் உங்கள் வகைகளுக்கு ஒரு சூப்பர் ஹீரோவாக இருப்பார், ஏனென்றால் நீங்கள் பல பெண்களின் எண்ணிக்கையைப் பெற்றிருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்; பயன்படுத்துவதற்கும் வீசுவதற்கும் பொருட்களைப் போன்றது. ஏன், அத்தகைய மனிதர்களை உங்கள் அரசியல் தலைவர்களாகவும் ஆக்குவீர்கள். இந்த மண்ணில் அது முக்கியமில்லை. பல பங்குதாரர்கள் / திருமணங்கள் / விவகாரங்களைக் கொண்ட ஒரு பெண் ஒரு ‘வேசி’ அறியப்பட்ட தொடர் துஷ்பிரயோகம் செய்பவரைக் கொண்டாடுவது DNA இல் இருப்பதில் ஆச்சரியமில்லை. ‘பாலினத்தைப் பற்றியது அல்ல’ என்று தோன்றுகிறது ‘ என்று கூறியுள்ளார்.

Advertisement