தன் குழந்தையுடன் சின்மயி பதிவிட்ட புகைப்படம், வைரமுத்துவிற்கு வாழ்த்து சொன்ன நபர் – சின்மயி கொடுத்த பதிலடி.

0
612
chinmayi
- Advertisement -

பிரபல பின்னணி பாடகையான சின்மயி தமிழ் சினிமாவின் பிரபல கவிஞரான வைரமுத்து மீது Metoo புகார் அளித்திருந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து சின்மயியை சமூக வலைதளத்தில் அடிக்கடி பல விமர்சித்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் தன்னுடைய குழந்தை புகைப்படத்திற்குநெட்டிசன் ஒருவர் செய்த மோசமான கமெண்டிற்க்கு சின்மயி பதிலடி கொடுத்திருக்கிறார். பின்னணி பாடகி சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராகுல் வேறு யாரும் இல்லை 2010 ஆம் ஆண்டு வெளியான மாசுகோவின் காவேரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தான். மேலும், இவர் நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் இயக்குனர் ஆவார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு என்று பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த எந்த படமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றியடையவில்லை. மேலும், இவர் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மன்மதடு 2 என்ற படத்தை இயக்கி இருந்தார். இதில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்து இருந்தார்.

- Advertisement -

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ராகுல் – சின்மயி தம்பதிக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாமல் தான் இருந்து வந்தது. அதே போல பாடகி சின்மயியும் வயதாகி கொண்டே போனதால் இவருக்கு குழந்தை இல்லாததை வைத்து பல முறை இவரை சமூக வலைதளத்தில் கேலிகள் கூட செய்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் சின்மயிக்கு டபுள் சந்தோசமாக Twins குழந்தைகள் பிறந்தது.

இதுகுறித்து பதிவிட்ட சின்மயி ‘“ட்ரிப்தா மற்றும் ஷ்ரவாஸ், எங்களது புதிய மற்றும் என்றைக்குமான பிரபஞ்சத்தின் மையம் இனி இவர்கள் தான்.எனது கர்ப்ப காலம் முழுவதும் நிறைய பேர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் எனக்கு குழந்தை இல்லாதது குறித்தும், நான் பெண்ணாக முழுமையடையவில்லை என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.நான் பெண்கள் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்னைகளை நேரடியாக புரிந்து கொண்டு அமைதி காத்தேன். இதை எல்லாம் தாண்டி நான் மக்களை பற்றி புரிந்துகொண்டேன் என்று உருக்கமுடன் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

பொதுவாக பிரபலங்கள் பலர் கர்ப்பமாக இருக்கும் போது போட்டோ ஷூட் நடத்துவது, வளைகாப்பு செய்து அந்த புகைப்படங்களை தங்கள் சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், சின்மயி தான் கர்ப்பமாக இருப்பதை பற்றி ஒரு பதிவை கூட போடவில்லை. அதே போல சின்மயிக்கு 37 வயது ஆகிறது இதனால் சின்மயி Surrogacy மூலம் அதாவது வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்று இருப்பார் என்று விமர்சனங்களுக்கு எழுந்து இருந்தது.

chinmayi

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இந்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்திருந்தார் சின்மயி. இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படம் ஒன்றை சின்மை பதிவிட்டிருந்தார். இதை கண்ட ஒரு நபர் வைரமுத்துவிற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள சின்மயி ‘நான் இதை (குழந்தைக்கு பால் கொடுக்கும் புகைப்படம்) பதிவிட்ட பின்னர் ஒரு தமிழர் இதைப் பதிவிட்டுள்ளார். அபார்ஷன் பயத்துடன் நான் கர்ப்பமாக இருந்ததை பதிவு செய்யாததற்கு முக்கிய காரணம், கற்பழிப்பு காதலர்கள் வந்து என்னை பாலியல் தொல்லை செய்தவர் இப்போது என் குழந்தைகளின் தந்தை என்று என்னிடம் கூறுகிறார்கள். நம்ம ஊர் பொருக்கீங்க பொருக்கீங்க தான். ரத்ததத்துலயே ஊர்னது. வளர்ப்பும் அப்படி என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement