என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நீங்கள் இதை வெளியிடுங்கள் என்று சொல்லியிருக்கிறேன் – சின்மயி கொடுத்த ஷாக்.

0
481
chinmayi
- Advertisement -

வைரமுத்து குறித்து மனம் திறந்து சின்மயி அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இதனைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் ஏன் இந்த மாதிரி? ஆளுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள்? இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள்? என்று சின்மையி விமர்சித்து டீவ்ட் போட்டு வருகிறார்.

- Advertisement -

சின்மயி-வைரமுத்து ப்ரச்சனை:

மேலும், இந்தப் பிரச்சனையில் இருந்து சின்மயி பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அடிமைத்தனம், பெண்கள் சுதந்திரம் போன்ற பெண்கள் தொடர்பான விஷயங்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சின்மயி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரிடம் கவிஞர் வைரமுத்து குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு சின்மயி கூறியிருந்தது, நான் வைரமுத்து பற்றி கூறியது அனைத்தும் உண்மை.

சின்மயி அளித்த பேட்டி:

நான் சொன்னதை நினைத்து மன நிறைவாக தான் இருக்கிறேன். இனி யாரைப்பற்றியும் தேவையில்லாமல் புகழாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆரம்பத்தில் அவரைக் குறித்து ட்விட்டர் போடும்போது பயந்தேன். இருந்தாலும், உண்மையை வெளியுலகிற்கு கொண்டுவர துணிச்சலுடன் செய்தேன். பலரும் நான் தெலுங்கு மொழியை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். நான் சுத்தமான தமிழச்சி. அதனால் தான் எனக்கு இவ்வளவு திமிரு. அதுமட்டுமில்லாமல் கவிஞர் வைரமுத்துவை குறித்து நான் மட்டும் புகார் அளித்ததாக சிலர் சொல்லி இருந்தார்கள்.

-விளம்பரம்-

வைரமுத்து மீது பல பேர் கொடுத்த புகார்:

ஆனால், என்னுடன் சேர்ந்து 19 பெண்கள் அவர் மீது புகார் அளித்திருக்கிறார்கள். அது வெளியே வரவில்லை. என்னை மட்டும் டார்கெட் செய்து இருந்தார்கள். நான் போட்ட டீவ்ட், இன்டர்வியூ அந்தப் பெண்களும் கலந்து கொண்டிருந்தார்கள். வைரமுத்துக்கு அரசியல் பின்புலம் அதிகம் இருக்கிறது. எனக்கு பல கொலை மிரட்டல்கள் எல்லாம் வந்தது. நான் அதற்கெல்லாம் பயப்படவில்லை. அது மட்டுமில்லாமல் என்னிடம் மொபைல் மூலம் மிரட்டிய ரெக்கார்டிங் எல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறேன். அதை எனக்கு தெரிந்த நான்கு பேரிடம் கொடுத்து வைத்திருக்கிறேன்.

கொலை மிரட்டல்:

பிற்காலத்தில் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நீங்கள் இதை வெளியிடுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். அந்த அளவிற்கு அவர் நிறைய ஆட்கள் வைத்திருப்பவர். அதேபோல் தயாரிப்பாளர் ராஜன் பேட்டியில், உன்னத மனிதனை சின்மயி குற்றம் சாட்டி இருக்கிறார். என்னிடமும் ஆட்கள் இருக்கிறார்கள் உன்னை சிதைத்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி இருந்தார். எனக்கு உயிர் பயமெல்லாம் கிடையாது. மிஞ்சிப்போனால் கொலை தான் செய்வார்கள். எல்லாத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

தமிழ் சினிமா வாய்ப்பு:

அவர்கள் சொன்னது போல் என்னை தமிழ் சினிமா உலகில் பணியாற்ற முடியாதபடி ban செய்து விட்டார்கள். இருந்தும், நான் உயிர் வாழாத போய்விட்டானா? தெலுங்கு மொழியில் எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. மீடு என்ற ஒன்றை நான் உருவாக்கவில்லை. ஊடகமும், சுற்றி இருந்தவர்களும் மீடு பிரச்சனையில் என்னை ஒரு பகடைக்காயாக மாற்றிவிட்டார்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement