நாயகன், சின்ன வீடு போன்ற பல படங்களில் நடித்த இவர் இந்த பிரபல நடிகரின் மகள் தானா ? அவரின் லேட்டஸ்ட் பேட்டி இதோ.

0
4939
chinnaveedu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படம் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதை படங்களை எடுப்பதில் பாக்கியராஜ் கைதேர்ந்தவர். இதை தொடர்ந்து படங்களை இயக்கி வந்த பாக்கியராஜ் நடிகராகவும் கொடிகட்டி பறந்தார். அதுமட்டுமில்லாமல் 80 காலகட்டத்தில் பாக்யராஜ் படங்கள் என்றாலே காமெடிக்கும் கிளுகிளுப்பும் பஞ்சமிருக்காது. ஒவ்வொரு படத்திலும் தினுசு தினுசாக நடிகர்களை இறக்கி விடுவார். அதிலும் இவரின் சின்ன வீடு என்ற படத்தின் மூலம் இளைஞர்கள் நெஞ்சை கிறங்கடிக்க செய்தார்.

-விளம்பரம்-

அந்த படத்தில் பாக்யராஜ் போலவே எல்லோரையும் கவர்ந்தது பபிதா தான். இவரைப் பற்றி தெரியாத பல விஷயங்களை இங்கு பார்க்கலாம். மறைந்த பழம்பெரும் புகழ்பெற்ற நடிகர் எம்ஜிஆரின் படங்களில் சண்டை காட்சிகளில் நடித்து இருந்தவர் ஜஸ்டின். இவர் எம்ஜிஆர் உடன் நேருக்கு நேர் சண்டை போடும் காட்சிகளில் நடித்து இருந்தவர். ஜஸ்டின் உடைய மகள் தான் பபிதா. இவருடைய சொந்த ஊர் நாகர்கோவில். 1980களில் பபிதா கவர்ச்சி வேடங்களில் ஒரு ரவுண்டு வந்தார் என்று சொல்லலாம். அதில் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த படம் தான் சின்ன வீடு.

- Advertisement -

நாயகன் நான் சிரித்தால் தீபாவளி :

அதுமட்டும் இல்லாமல் கமலஹாசனின் மாஸ்டர் பீஸான நாயகன் படத்தில் வரும் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலுக்கு இவர் நடனம் ஆடி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்திருந்தார். மேலும், சின்ன வீடு படத்திற்கு முன்பாக இவர் பாக்கியராஜின் பவுனு பவுனு தான் படத்தில் ஐஸ் ப்ரூட் மாமியாக வருவார். அப்போது கவர்ச்சி பாம், கவர்ச்சி கன்னி, கவர்ச்சி புயல் என்று அழைக்கப்படும் ஷகிலாவுக்கு போட்டியாக கவர்ச்சி நாயகியாக திகழ்ந்தவர் பபிதா. பின் பல படங்களில் நடித்து வந்த நடிகை பபிதா சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் அரசியலுக்கு சென்று விட்டார்.

அரசியலில் பபிதா:

பின் தன்னுடைய மகளான லஷாவை வைத்து ஒரு திரைப்படமும் தயாரித்தார். அந்த படத்திலும் ஷகிலாவுக்கு இவர் ஒரு முக்கியமான ரோல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடைய தந்தை எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர் என்பதால் இயல்பாகவே அதிமுக காரராக பபிதா வலம் வந்தார். ஜெயலலிதா மீது கொண்ட அதீத அன்பு காரணமாகவும் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பபிதா நியமிக்கப்பட்டார். பின் ஜெயலலிதா சிறையில் இருந்து ஜாமினில் வெளி வந்தவுடன் சந்தோசத்தில் கூடை கூடையாக தேங்காய்களை வாங்கி நடுத்தெருவில் தேங்காய் உடைத்து தெரிந்ததெல்லாம் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வந்தது.

-விளம்பரம்-

பபிதா அளித்த பேட்டி:

அதற்குப்பின் இவரைப் பற்றி எந்த செய்திகளும் வெளிவராத நிலையில் பபிதா சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரைப் பயணத்தை குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் முதன் முதலாக நடித்த படம் தென்றல் எண்ணை தொடு. நான் 14 வயதில் நடிக்க ஆரம்பித்தேன். என்னுடைய அப்பா பெயர் ஜஸ்டின். அவர் தலைவர் எம்ஜிஆர் உடைய பல படங்களில் நடித்திருக்கிறார். எனக்கும் தலைவரை நன்றாக தெரியும். அவர் வீட்டில் சாப்பிடுவது, பேசுவது, நல்ல பழக்கம். சொல்லப்போனால் குடும்ப நண்பர்கள் போல் என்னுடைய அப்பாவும் தலைவரும் இருந்தார்.

சினிமாவில் நுழைய பபிதா பட்ட கஷ்டம்:

பின் நான் படத்தில் நடிக்க வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டேன். அப்போ ஏற்றுக்கொள்ளவே இல்லை. அம்மாவும் நானும் ஆறுமாதம் வீட்டில் பயங்கரமாக சண்டை போட்டு போராடினோம். ஆனால், அப்பா நான் எந்த பணமும் தர மாட்டேன். என்னுடைய பெயர் பயன்படுத்தக்கூடாது. நீயே சினிமாவில் நுழைந்து உன்னால் முடிந்ததை சாதித்துக் கொள் என்று சொன்னார். பின் எப்படியோ போராடி படத்தில் நடிக்க தொடங்கினேன். நான் முதல் முதலாக ஒரு பாடலுக்கு நடனமாட சொல்லி இருந்தார்கள். நாயகன் படத்தில் நான் சிரித்தால் பாடலுக்கு நடனம் ஆடினேன். அந்தப் பாடல் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரும் கிடைத்தது. அந்த பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

சின்னவீடு படம் தான் என்னை பிரபலமாக்கியது:

முதல் சூட்டிலேயே காட்சி அருமையாக வந்தது. அதனை தொடர்ந்து பூவே பூச்சூடவா, மங்கை ஒரு கங்கை தொடர்ந்து பல படங்களில் செகண்ட் ஹீரோயினாக நடித்தேன். பின் ஐஸ் ப்ரூட் மாமி என்ற கதாபாத்திரம் எனக்கு தமிழ் சினிமா உலகில் ஒரு முத்திரையைப் பதிக்க வைத்தது. இப்ப கூட பல பேர் என்னை ஐஸ் ப்ரூட் மாமி என்று தான் சொல்வார்கள். அந்த அளவிற்கு அந்த பெயர் வாங்கித் தந்தது. அதற்கு பிறகு பாக்கியராஜ் உடைய சின்ன வீடு படத்தின் மூலம் தான் எனக்கு பிரபலம் கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததற்கு பிறகு எனக்குப் பல மொழிகளில் பட வாய்ப்புகள் வந்தது என்று சொல்லலாம். இன்று வரை என்னால் அந்த படத்தை மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

Advertisement