மன்சூர் அலிகான் பற்றி எல்லாம் நீங்க பேசலாமா? சிரஞ்சீவியை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

0
394
Chiranjeevi
- Advertisement -

சமீபத்தில் திரிஷா குறித்து மன்சூர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. மன்சூர் அலிகானுக்கு எதிராக தொடர்ந்து பலர் ஆதரவும் எதிர்ப்புகளும் குவிந்த வரும் நிலையில் தெலுங்கு நடிகரும், மெகா ஸ்டார் என்று பரவலாக அழைக்கப்படும் சிரஞ்சீவி திரிஷாவிற்கு ஆதரவு தெரிவித்து மன்சூர் அலிகானின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சில கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த கருத்துக்கள் ஒரு கலைஞருக்கு மட்டுமல்ல, ஒரு பெண்ணுக்கும் அருவறுக்கத்தக்க வகையில் உள்ளது.

-விளம்பரம்-

இந்த விஷயத்தில் நான் திரிஷாவுக்காகவும், இது போன்ற கொடூரமாக கருத்துக்களுக்குள்ளாகும் ஒவ்வொரு பெண்ணுக்காகவும் உடன் நிற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தது சரியான விஷயம் என்றாலும் பழைய சம்பவத்தால் தற்போது கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் சிரஞ்சீவி. சிரஞ்சீவி இறுதியாக அஜித்தின் வேதாளம் ரீமேக்கில் நடித்து இருந்தார்.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் தமிழில் அஜித் தங்கையாக நடித்த லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாகி இருந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சி அதற்கும் முன்னர் நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் கீர்த்தி சுரேஷ் குறித்து சிரஞ்சீவி பேசி இருக்கும் விஷயம் தான் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தத்து .

இந்த விழாவில் பேசிய சிரஞ்சீவி ‘தினமும் எங்க வீட்ல சாப்பிட்டு எப்படி கிளாமரா ஆகிட்டாங்க பாருங்க’ என்று பேசியதோடு கீர்த்தி சுரேஷை கன்னத்தை கிள்ளினார். இதனை தொடர்ந்து ‘முதல் நாளே சொல்லிவிட்டேன், என்னை அண்ணன் என்று அழைக்க வேண்டாம் என்று. நான் உனக்கு அண்ணன் இல்லை, உனக்கு நிறைய அண்ணன்கள் இருக்கிறாரகள். நீ என் அடுத்த படத்துல ஹாரியினா மட்டும் இரு’ என்றும் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

இ’ந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் சிரஞ்சீவியை கடுமையாக விமர்சித்து வந்தனர். சிரஞ்சீவி இது போல சர்ச்சையில் சிக்குவது முதன் முறையல்ல கடந்த ஆண்டு சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு சூட் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படமும் மாபெரும் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போதும் சிரஞ்சீவி, பூஜா ஹேக்டேவிடம் நடந்துகொண்ட விதம் விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த நிகழ்ச்சியில் பூஜா ஹேக்டே நின்று கொண்டு இருந்த போது டிகர் சிரஞ்சீவி அவர்கள் தன் மகன் ராம் சரணை ஒதுக்கிவிட்டு தனியாக பூஜா போஸ் கொடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் பூஜா மேடையிலிருந்து கீழே இறங்க முயற்சி செய்தும் அவரை வலுக்கட்டாயமாக நிறுத்தி சிரஞ்சீவி போட்டோக்களை எடுத்து இருந்தார். அதே போல அவரை கட்டி அனைத்து போஸ் கொடுத்து இருந்தார்.

பின் மேடைக்கு கீழும் சிரஞ்சீவி பக்கத்தில் உட்கார்வதை தவிர்க்க பூஜா முயற்சி செய்தார். அப்போது சிரஞ்சீவி அவரை கட்டாயப்படுத்தி உட்காரவைத்தார். இப்படி சிரஞ்சீவி நடந்திருக்கும் செயல் குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் விவாதமாக மாறியது. இதனை தொடர்ந்து நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement