அவங்கள ரொம்ப ‘சோதிக்காதீங்க கடவுளே. ஜூனியர் ‘சிருவுக்காக’ பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்.

0
3372
chiru
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா ராஜ்ஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் மருமகனும் தான் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா. ஜூன் 6 ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.

-விளம்பரம்-

பின் உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த போது அவருக்கு 39 வயது தான் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.நடிகை மேக்னாவும், சிரஞ்சீவி சார்ஜாவும் 10 வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ச

- Advertisement -

சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் கற்பாக இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. சமீபத்தில் நடிகை மேக்னாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. , அதில் கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட்டுடன், தன்னுடைய வளைக்காப்பு நிகழ்வு படங்களை பகிர்ந்து இருந்தார். அதே போல கடந்த அக்டோபர் மாதம் மேக்னாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ஜூனியர் சிரு பிரிந்துவிட்டார் என்று ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர்.

இப்படி ஒரு நிலையில் மேக்னாவின் குடும்பத்திற்கு மீண்டும் ஒரு சோதனை நடந்துள்ளது. அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ள மேக்னா என்னுடைய அப்பா, அம்மா, நான் மற்றும் ஜூனியர் சிரு ஆகியோருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. எனது ரசிகர்களும், சிருவின் ரசிகர்களும் கவலைப்பட வேண்டாம். நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். ஜூனியர் சிருவும் நலமாக இருக்கிறார். குடும்பமாக நாங்கள் கொரோனாவுக்கு எதிராக போராடி வெற்றியுடன் திரும்புவோம்,” என தெரிவித்து இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் சிரஞ்சீவி குடும்பத்தை அதிகம் சோதிக்க வேண்டாம் கடவுளே என்றும், விரைவில் அவர்கள் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement