அயோத்தி ராமர் விழா : பாடகி சித்ரா வெளியிட்ட வீடியோவால் எழுந்த விமர்சனங்கள்.

0
483
- Advertisement -

அயோத்தி ராமர் விழா தொடர்பாக பாடகி சித்ரா வெளியிட்ட வீடியோவால் சோசியல் மீடியாவில் ஏற்பட்டு இருக்கும் சர்ச்சை தான் தற்போது வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே. இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீராம் ஜென்மபூதி தீர்த்தத்தின்படி இராமன் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம்.

-விளம்பரம்-

ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் இந்தக் கோயில் கொண்டுள்ளது. மேலும், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்லும் பிரதான நுழைவாயிலில் யானைகள், சிங்கங்கள், அனுமான் மற்றும் கருடா போன்ற சிலைகள் இருக்கிறது. இந்த சிலைகள் எல்லாம் ராஜஸ்தானின் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட மணல் கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. பாரம்பரிய முறையில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

- Advertisement -

சித்ரா வீடியோ:

இப்படி புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயில் வருகிற 22 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. அந்த தினத்தில் அனைவருமே வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில் அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை தினத்தன்று விளக்கேற்றி ராமர் மந்திரத்தை ஜெமிக்குமாறு பிரபல பின்னணி பாடகி சித்ராவும் வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிக வைரலாகி இருக்கிறார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து பாடகி சித்ராவை விமர்சித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பாடகர் சூரத் சந்தோஷ் இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இன்னும் எத்தனை அடையாளங்கள் அளிக்கப்படும். கே எஸ் சித்ரா போன்ற எத்தனை உண்மை முகங்கள் வெளிவரும்.

-விளம்பரம்-

ஆதரவு தெரிவிக்கும் நபர்கள்:

வரலாற்றை அசௌரிகமாக மறந்து விட்டு அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், கேரளாவில் பாடகி சித்ராவுக்கு எதிராக பலரும் சோசியல் மீடியாவில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கேரள பாஜக தலைவர் சுரேந்திரன், பாடகர் வேணுகோபால் சித்ராவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

சித்ரா குறித்த தகவல்:

தமிழ் சினிமாத் துறையில் சின்னக் குயில் சித்ரா என்று சொன்னால் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. மனதை வருடும் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். இவர் ஏராளமான மொழிகளில் 25,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். தனது பாடலுக்காக 6 முறை தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். பாடகி சித்ரா அவர்கள் சினிமா துறைக்குள் நுழைந்து 41 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.

Advertisement