அம்மா, அக்கா இறந்துட்டாங்க சமீபத்தில் அண்ணனும் இறந்துட்டான் – சின்னத்தம்பி பட நடிகையின் வாழ்வில் இவ்வளவு சோகமா.

0
806
anju
- Advertisement -

80’s காலகட்டங்களில் கிளாமர் நடிகையாக வலம் வந்தவர் தான் அனுஜா ரெட்டி இவர் படங்களில் சிறிய பகுதிகளை வந்திருந்தாலும் அந்த காட்சிகள் நம் மனதில் அப்படியே பதியும்படி நடித்திருப்பார். இதுபோன்று இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் 200 படங்கள் நடித்திருக்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணிக்கு மனைவியாக வருவபவர் தான் அனுஜா ரெட்டி. அந்த படத்தில் கவுண்டமணி ஆறு மணிக்கு மேல் கண்ணு தெரியாது அப்போது அவரின் மனைவியாக இவர் நடித்திருக்கும் காட்சிகள் இன்றும் பலரல் பேசப்படும். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு இன்டர்வியூ கொடுத்த அனுஜா பேசியதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

முதல் பட வாய்ப்பு :

அனஜா ரெட்டி ஆந்திராவில் குண்டூர் என்ற இடத்தில் பிறந்தவர். அதன் பின்பு தன்னுடைய மூன்று வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்து வந்து விட்டார். அப்போது சென்னையில் அவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு மலையாள படத்திற்கு 3வது ஹீரோயின் தேவைப்பட்டதால் இவரை பார்த்தவுடன் பேசி அந்த படத்திற்கு நடிக்க கூட்டு சென்று விட்டார்களாம். அந்த படத்தில் முதல் ஹீரோயினும் இரண்டாவது ஹீரோயனுக்கும் எனக்கும் சண்டை ஏற்பட்ட காரணத்தால் முதல் ஹீரோயின் படத்தில் இருந்து விலகி சென்று விட்டார். அதன் பின்பு இவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது இப்படி தான் திரைப்படத் துறைக்குள் வந்தார் அனுஜா ரெட்டி .

- Advertisement -

அனுஜா ரெட்டி குடும்பம் :

மேலும் அனுஜா ரெட்டியின் குடும்பத்தை பற்றி நிகழ்ச்சி தொகுப்பாளர் விசாரித்த பொழுது உடன் பிறந்தவர்கள் 2 அண்ணன்கள் ஒரு அக்கா நான் தான் கடைசி பிறந்த பெண் என்றும் கூறினார். அநற்கு பின் கண் கலங்கி கொண்டே கடந்த இரண்டு வருடங்களில் தன்னுடைய அம்மாவும் அக்கா தவறிவிட்டதாகவும் சமீபத்தில் தான் தனது ஒரு அண்ணனும் தவறிவிட்டார் என்றும் கண்கலங்கியபடியே அனுஜா ரெட்டி தன் குடும்பத்தை பற்றி கூறினார். பின்பு தன் அண்ணனின் நண்பரே திருமணம் செய்து கொண்டதாகவும். தன் கனவர் தற்பொழுது பிசினஸ் செய்வதாகவும். இப்போது தனக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறான் என்றும் தனது குடும்பம் பற்றி அனுஜாரிட்டி கூறினார்.

அட்ஜெட்மென்ட் :

மேலும் தொகுப்பாளர் அன்ஜா ரெட்டியிடம் படங்களில் நடிப்பதற்கு உங்களிடம் அட்ஜெட்மென்ட் கேட்டுள்ளார்களா என தொகுப்பாளர் கேட்க .அதற்கு பதில் அளித்த அனுஜா ரெட்டி என்னிடம் இதுவரை யாரும் அப்படி கேட்டதில்லை அதற்கு முதல் நம் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். நாம் அவர்களுக்கு நம்மிடம் அந்த எண்ணம் ஏற்படும்படி நடந்து கொள்ளாமல் இருந்தாலே இதுபோல் இந்த அசம்பாவிதங்களும் நடக்காது என்றும் இப்போதெல்லாம் சினிமாவில் வளர்வதற்காக ஆசைப்பட்டு அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கிறார்கள் பின்பு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற நேரத்தில் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டு விட்டார் எனவும் வெளியில் வந்து பேசுகிறார்கள் என உண்மையை போட்டு உடைத்தார்.

-விளம்பரம்-

கிளாமரக நடிக்க காரணம் :

நீங்க எப்படி கிளாமர் ஆக நடிக்க வந்தீர்கள் என்ற தொகுப்பாளர் கேட்க. அனுஜா நான் ஆசைப்பட்டு ஒன்னும் இந்த துறையை தேர்ந்தெடுக்கவில்லை. முதலில் நான் நடன கலைஞராக சினிமாவில் பணியாற்றிக் கொண்டே இருந்தேன் பின் நிறுத்திவிட்டு மறுபடியும் கேரக்டராக நடிக்க வந்தேன் அப்பொழுது கிளாமராக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட பொழுது நான் மனமில்லாமல் நடித்தேன் பின் படங்கள் ஹிட்டாக ஆரம்பித்தவுடன் எனக்கு மிகவும் பிடித்தது. இப்படி தான் கிளாமராக நடிக்க வந்தேன் மேலும் நாம் ந நடனமாடும் போது கிளாமர் நடனம் என்றால் ஹீரோயின் போட்டிருக்கும் அதை உடைய தான் நானும் போட்டிருப்பேன். நடிக்க வந்த பிறகு அதேபோன்று உடை அணித்து கொள்கிறேன் ஆனால் நான் முன்னாடி இருக்கிறேன் அவ்வளவுதான் வித்தியாசம் என கூறினார்.

சின்ன தம்பி :

மேலும் தொகுப்பாளர் சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணியுடன் நடித்ததை பற்றி கேட்க அதற்கு பதில் கூறிய அனுஜா ரெட்டி. அவர் கவுண்டமணியுடன் நடித்திருந்தது மிகவும் அருமையான காட்சி தான் அவருடன் வண்டியில் செல்லும் காட்சி எடுக்கும் போதெல்லாம் அவர் வண்டியை ஒரு மாதிரி உலட்டி கொண்டே ஓட்டும் காட்சி வரும். எனக்கு அந்நேரம் எல்லாம் பயமாகத்தான் இருந்தது மேலும் அந்த படத்தில் அதே கேரக்டரில் தெலுங்கு கன்னடம் இரு மொழிகளிலும் நான்தான் நடித்தேன். நான் நடித்ததில் கவுண்டமணி சார் மட்டும் நடிக்கும் போது காமெடியாக பேசுவார் மிச்சபடி நடித்து முடித்தவுடன் டென்ஷனாக இருப்பார். ஆனால் தெலுங்கு, கன்னடம் படம் நடிக்கும் போதெல்லாம் அந்த ஷூட்டிங் நேரத்தில் கலகலப்பாக இருப்போம் என கூறியிருந்தார் அனுஜா ரெட்டி.

Advertisement