எல்லாத்துக்கும் அவங்க 2 பேர்தான் காரணம் – குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி உருக்கமான பதிவு

0
1650
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4ன் இறுதி சுற்று குறித்து நடிகை ஸ்ருஷ்டி டாங்கே பதிவிட்டிருக்கும் உருக்கமான பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. மேலும், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி தற்போது டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்களின் பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல், பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இப்படிபட்ட நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி 4 :

அதோடு இந்த சீசனில் புதிய கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களில் கோமாளியாக வந்த சிவாங்கி இந்த முறை குக்காக வந்து இருக்கிறார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து கிஷோர், ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஷெரின், காளையன், கஜேஷ், ஆன்ட்ரியன் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் எலிமினேட் ஆகிருக்கிறார்கள். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. மேலும், கடந்த வாரம் நிகழ்ச்சியின் டிக்கெட் டு ஃபினாலே சுற்று நடைபெற்றது.

நேரடியாக பைனலுக்கு தேர்வான நபர்:

இதில் விசித்திரா, நன்றாக சமைத்து நடுவர்களிடம் பாராட்டுகளை பெற்றிருந்தார். அதோடு இவர் நேரடியாக பைனல் லிஸ்ட் என்று இவரை நடுவர்கள் அறிவித்திருத்து இருக்கிறார்கள். மேலும், இந்த வாரம் அரை இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் மூன்று நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நடுவர்கள் அறிவித்திருந்தார்கள். அதன்படி நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் மைம் கோபி இரண்டாம் இடத்தையும், சிவாங்கி மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தார்.

-விளம்பரம்-

இறுதி சுற்று குறித்த தகவல்:

நான்காவது போட்டியாளராக சிருஷ்டியும் தேர்வாகியிருந்தார். இவர்களை அடுத்து ஐந்தாவதாக கிரண் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஐந்தாவது போட்டியாளராக கிரனை நடுவர்கள் தேர்ந்தெடுத்திருந்தார்கள். தற்போது விசித்ரா, மைம்கோபி, சிவாங்கி, சிருஷ்டி, கிரண் ஆகிய ஐந்து பேரும் இறுதிச்சுற்றில் மோத இருக்கிறார்கள். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

சிருஷ்டி டாங்கே இன்ஸ்டாகிராம் பதிவு:

இந்த நிலையில் இது குறித்து சிருஷ்டி டாங்கே அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர், தேங்க்யூ மோனி மற்றும் தங்கத்துரை உங்கள் இரண்டு பேரையும் நான் மிகவும் காதலிக்கிறேன். நான் வென்ற போது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டது போல் உணர்ந்தேன். இவை எல்லாத்திற்கும் காரணம் மோனி மற்றும் தங்கதுரை தான் என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார் .

Advertisement