குக்கு வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறியவர் யார் தெரியுமா ? பாவம் இவர் தான். (நீங்க எதிர்பார்த்தீங்களா)

0
2226
cooku
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க : போரடித்து போன ரைபிள் – துப்பாக்கி சுடும் பயிற்சயில் அடுத்த லெவலுக்கு சென்றுள்ள அஜித். இதோ புகைப்படம்.

- Advertisement -

இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தாவும் இதுவரை வெளியேறியுள்ளனர். கடந்த சில வாரங்களாக எலிமினேஷன் இல்லாமல் இருந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வாரம் கனி இம்யூனிட்டி பேண்ட்டை வென்று இருந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் இருந்து வந்த நிலையில் இந்த வாரம் ரித்திகா வெளியேறி இருக்கிறார்.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் தான் இந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக சீரியல் நடிகை ரித்திகா என்ட்ரி கொடுத்து இருந்தார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கலந்து கொண்ட ஒரு சில வாரத்திலேயே ரித்திகா வெளியேறியது போட்டியாளர்களுக்கு பார்வையாளர்களுக்கும் கொஞ்சம் சோகத்தை ஏற்படுத்துயுள்ளது.

-விளம்பரம்-
Advertisement