நான் எது பண்ணாலும் ட்ரெண்டிங் கொண்டு வந்துருவாங்க, மில்லயன் வியூஸ் சீக்கிரமா போய்டும் – அஸ்வினின் அடுத்த வீடியோ.

0
737
aswin
- Advertisement -

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிவடைந்த ‘குக் வித் கோமாளி’ 2 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றவர் அஸ்வின். இவர் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்துள்ளார். அதே போல ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறு ரோலில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-74-1024x516.jpg

இருந்தாலும் இவர் குக் வித் கோமாளி சீசன் 2 என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனை தொடர்ந்து இவர் ஆல்பம் சாங், வெப் சீரிஸ் என்று நடித்து வருகிறார். தற்போது அஸ்வின் அவர்கள் ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

அஸ்வினின் சர்ச்சை பேச்சி :

இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதுவரை நான் 40க்கும் மேல் கதைக் கேட்டு தூங்கி இருக்கிறேன். தூங்காத கேட்ட ஒரே கதை இயக்குனர் ஹரிஹரன் சொன்ன கதை மட்டும் தான். அதனால் தான் இந்த படத்தில் நடித்து இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் இந்த படம் நன்றாக வர வில்லை என்றால் படத்தை வெளியிடும் அனுமதிக்கமாட்டேன் என்று பேசி இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-169-1024x495.jpg

அஸ்வினின் மன்னிப்பு :

இதனால் சோசியல் மீடியாவில் அஸ்வின் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்தும், நெட்டிசன்கள் அஸ்வினை கிண்டல் செய்து மீம்ஸ்களைப் போட்டு வந்தனர். இதுகுறித்த வெளியிட்ட அஸ்வின், கூட்டத்தை பார்த்ததும் அப்படி பேசிவிட்டேன். நான் 40 கதையை எல்லாம் கேட்டேன் என்பதை ஒரு குத்து மதிப்பாக சொன்ன விஷயம். என் பேச்சு யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

அஸ்வினின் அடுத்த வீடியோ :

அஸ்வினின் இந்த பேச்சால் சர்ச்சை ஏற்பட்ட இன்று வெளியாக வேண்டிய படம் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் என்ன சொல்ல போகிறாய் இசை வெளியிட்டு விழாவில் பேசிய பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அஸ்வின் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

நான் என்ன பண்ணாலும் ட்ரெண்டிங் :

அதில் பேசி இருக்கும் அவர், அன்று உண்மையில் நான் மிகப்பெரிய பிரஷரில் இருந்தேன் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் நான் என்ன செய்தாலும் அதனை டிரெண்டிங்கில் கொண்டு வந்து விடுகிறார்கள், மில்லியன் வியூஸ் சீக்கிரம் போய்விடும். அது என் படத்திற்கும் வரவேண்டும் என்னை நம்பி தயாரிப்பாளர் பணம் போட்டு இருக்கிறார் இந்த மாதிரி நிறைய பயங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும் என்றுபேசி இருக்கிறார்.

Advertisement