இதனால் தான் இரண்டு வாரமாக குக்கு வித் கோமாளிக்கு வரல – பவித்ரா வெளியிட்ட விளக்கம்.

0
1975
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் குக்கு வித் கோமாளி சீசன் 1 போட்டியாளர்களான வனிதா, ரம்யா, ரேகா, உமா ரியாஸ் ஆகியோர் வந்திருந்தனர். சீசன் 1-ல் ரம்யா பாண்டியன் இருந்த வரை அவரிடத்தில் தான் ரொமான்ஸ் சேட்டையை செய்து வந்தார். இரண்டாவது சீசனில் அதே பிட்டை தர்ஷா மற்றும் பவித்ராவிடம் போட்டு வருகிறார் புகழ். ஆனால், தர்ஷா ஏற்கனவே வெளியேறிய நிலையில் கடந்த இரண்டு வாரமாக பவித்ராவையும் காணவில்லை.

இதையும் பாருங்க : உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டிய ஆண்ட்ரியா – கண்ட மேனிக்கு குவியும் கமன்ட்.

- Advertisement -

இந்நிலையில் இந்த வார குக் வித் கோமாளி ப்ரோமாவையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதிலும் பவித்ராவை காணவில்லை. அதனால் பவித்ரா எங்கே எனக் கேள்வி எழுப்பினார்கள் நெட்டிசன்கள். இந்நிலையில், “சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு வாரங்களாக கலந்துக் கொள்ள முடியவில்லை. அடுத்த வாரம் நிச்சயம் வந்துவிடுவேன். உங்களை ஏமாற்றியதற்காக மிகவும் வருந்துகிறேன். என் மேல் நீங்கள் காட்டும் அன்பு, எனக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி” என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 1-12-578x1024.jpg

சமீபத்தில் ரசிகர் ஒருவர், புகழுக்கு பவித்ரா தான் நல்ல ஜோடி, ரம்யா பாண்டியனை போட வேண்டாம் என்று சொன்னதற்கு, இரண்டு பேரை ஒப்பிடுவது மிகவும் சுலபம், குறை கண்டுபிடிப்பதும் சுலபம். அனைத்திற்கும் மேலாக இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.அதன் முக்கிய நோக்கம் உங்களை மகிழ்விப்பது தான். தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். நாங்கள் யாரும் அதை செய்வது இல்லை. ரம்யா மிகவும் இனிமையான நபர். முந்தய சீசன் அனைத்து எபிசோடையும் இப்போதான் பார்த்தேன். ஒரு மணி நேர நிகழ்ச்சியை வைத்து யாரையும் மதிப்பிடத்தீர்கள். அனைவருக்கும் உங்கள் அன்பை கொடுங்கள் என்று கூறியிருந்தார் பவித்ரா.

-விளம்பரம்-
Advertisement