என் அம்மா கிட்ட தான் லேடி கெட்டப் போட புடவை அனுப்ப சொல்லுவேன். ஏன்னா – மேடையில் புகழ் உருக்கம்.

0
2493
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு நிறைவடைந்த குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் சென்று கொண்டு இருக்கிறது. இந்த இரண்டு சீசனும் வெற்றி பெற முக்கிய காரணம் நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லை. அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. தற்போது குக் வித் கோமாளியின் செலிபிரிட்டி ஆக சோசியல் மீடியாவில் பரவியிருப்பது நம்ம புகழ் தான்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு காமெடி மழை பொழிந்து தள்ளுகிறார் புகழ். கடலூரை சேர்ந்த இவர் வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு 2008ம் ஆண்டு சென்னைக்கு வேலை தேடி வந்திருக்கிறார் அப்போது இவரை வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இருக்கிறார்கள் அதன் பின்னர் இவர் மேக்கானிக் கடையில் வேலை செய்து இருக்கிறார் பின்னர் வாட்டர் வாஷ் கடையில் கூட வேலை செய்து இருக்கிறார்.

- Advertisement -

அந்த சமயத்தில் இவருக்கு பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ் உடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. அதன் பின்னர் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். செட்டில் அனைவரிடமும் இவர் கலகலப்பாக பேசுவார் அதன்மூலம் இவருக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே அது இது எது, சிரிச்சா போச்சு என்று பல நிகழ்ச்சி மூலம் தனது வித்தியாசமான கெட்டப்புகளில் போட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் புகழ்.

இப்படி ஒரு நிலையில் புகழுக்கு, தனியார் நிறுவனம் ஒன்று விருது ஒன்றை வழங்கி இருந்தது. அந்த விருதை பெற்ற புகழ், நான் லேடி கெட்டப் போட என் அம்மவிடம் தான் பாவாடை புடவை எல்லாம் கேட்பேன். அப்போது என் நண்பர்களே நான் லேடி கெட்டப் போடுவதை கேலி செய்து இருக்காங்க. நான் இன்று இந்த அளவிற்கு இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் லேடி கெட்டப் தான். அதை இப்போதும் போட தயங்கமாட்டேன் என்று உருக்கமாக கூறி உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement