பிரியங்காவுக்கு மட்டும் முக்கியத்தவும், மட்டம் தட்டப்படும் கோமாளிகள் – என்ன நடக்கிறது CWC செட்டில்.

0
172
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து நாஞ்சில் விஜயன் வெளியேறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான்கு சீசனும் ஒளிபரப்பாகி இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிறுவனம் Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார்.

- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி:

இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர்.
அதே போல இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் பூஜா, சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர். இதில் ரசிகரகளுக்கு பரிட்சியமில்லாத சில போட்டியாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

நிகழ்ச்சி அப்டேட்:

மேலும், கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தான் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. இரண்டாவது எபிசோடிலேயே குக்கிங் ஸ்டார்ட் ஆகிவிட்டது. இதில் செப்ஃ ஆப் தி வீக் பட்டத்தை சுஜிதா வென்றிருந்தார். இந்த நிலையில் கோமாளியாக இருக்கும் நாஞ்சில் விஜயன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். இதுதான் சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளப்பி இருக்கிறது. இதுகுறித்து நாஞ்சில் விஜயன், இனி பாக்ஸ் ஆபீஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள போவதில்லை.

-விளம்பரம்-

நாஞ்சில் விஜயன் பதிவு:

சொன்னது ஒன்னு, உள்ளே நடப்பது ஒன்னு என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறி இருந்தது பலருக்கும் அதிருப்தி தான். மேலும், இது குறித்து நிகழ்ச்சிக்கு தொடர்புடையவர்கள் கூறியிருப்பது, ஏற்கனவே நிகழ்ச்சியிலிருந்து வெங்கடேஷ் பட், தயாரிப்பு நிறுவனம், இயக்குனர்கள் எல்லாம் விலகி இருந்தார்கள். பல சலசலப்புக்கு மத்தியில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. தயாரிப்பு தரப்புக்கும் போட்டியாளர்கள் சிலருக்கும் இடையில் கம்யூனிகேஷனில் ஏதோ பிரச்சனை என்று சொல்கிறார்கள். நாஞ்சில் விஜயன் விவகாரத்திலும் மிஸ் கம்யூனிகேஷன் தான் காரணமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

நாஞ்சில் விஜயன் தரப்பு நியாயம்:

இதை அடுத்து நாஞ்சில் விஜயன் நண்பர்கள் கூறியிருப்பது, நிகழ்ச்சிக்கு கூப்பிடும் போது முழுவதுமே வருவீர்கள் சொல் என்று சொல்லித்தான் கூப்பிட்டு இருந்தார்கள். ஆனால், முதல் எபிசோடு சூட்டிங் போன பிறகு தான் ஏமாத்திட்டீங்க என்று தெரியவந்தது. ஏற்கனவே முந்தைய சீசனில் கலந்து கொண்ட பழைய கோமாளிகளுக்கு தான் ரொம்ப முக்கியம் தருகிறார்கள். புதிதாக வந்தவர்களை பேருக்கு பயன்படுத்துகிறார்கள். சூட்டிங் நடக்கும்போது பழைய கோமாளிகள் யாரும் இல்லை என்று தான் புது கோமாளிகளை தேடி இருக்கிறார்கள்.

இது குறித்து சில கோமாளிகளே கூறி இருந்தார்கள். இது குறித்து சிலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். ஆனால், யாருக்குமே சரியான பதில் நிறுவனம் கொடுக்கவில்லை. இந்த பிரச்சினை தான் நாஞ்சில் விஜயனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் கடுப்பாகி சோசியல் மீடியாவில் பதிவு போட்டிருந்தார். பிறகு நிகழ்ச்சி தொடர்பான சிலர் அவரை கேட்டபோது அவர் பதிவை நீக்கிவிட்டார். ஆனால், ரொம்ப வருத்தத்தில் தான் இருக்கிறார். இதெற்கெல்லாம் மேல் விஜய் டிவியின் செல்லப் பிள்ளை என்பதால் பிரியங்காவுக்கும், பாக்ஸ் ஆபிஸ் தயாரிக்கும் சீரியலில் நடிப்பதால் அன்ஷிதாவுக்கும் தனி முக்கியத்துவம் தரப்படுவதாகவும் சிலர் புகைச்சலைக் கிளப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

Advertisement