விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு ஆண் போட்டியாளர்கள் பிரபலமானார்கள் ஆனார்கள். ஆனால், பெண் போட்டியாளர்களில் ஆனது என்னவோ அறந்தாங்கி நிஷா மட்டும்தான். பொதுவாக பெண் மேடை ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் கொஞ்சம் அரிதான ஒன்று. அப்படி அறிமுகமான பல பெண் மேடை ஸ்டான்ட் அப் காமடியன்கள் விலாசம் இல்லாமல் சென்று விட்டார்கள். ஆனால், காமெடி செய்ய முடியும் என்று மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர் அறந்தாங்கி நிஷா.
காமெடியில் பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறி வந்தார்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் இவரது கதாபாத்திரம் கவனிக்கப்பட்டது.
இதையும் பாருங்க : ஹேராம் படத்தில் ஷாருக்கான் பெற்ற சம்பளம் எவ்வளவு? கமல் சொன்ன தகவல். வீடியோ இதோ.
அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சொல்லப்போனால் திருமணம் ஆன பின்னர் தான் அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகனும் இருக்கிறார். சமீபத்தில் அறந்தாங்கி நிஷாவிற்கு இரண்டாம் குழந்தை பிறந்துள்ளது. அதுவும் அவர் ஆசைபட்டபடியே பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிஷாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், நானும் என் மகளும் நலமாக இருப்பதாகவும், பாப்பாவிற்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்திருக்கிறோம். உங்கள் எல்லாருடைய வாழ்த்துக்கள் தேவை என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் நிஷா. சமீபத்தில் நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் தூங்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘ சஃபா எங்க அம்மா மாதிரி இருக்கா. நானும் அதான் ஆசைப்பட்டேன். அவ எங்க அம்மா மாதிரியே தூங்குராபா 47 நாளில் எங்க அம்மாவா மாறிட்டா நன்றி கடவுளே’என்று குறிப்பிட்டுள்ளார்.