குடிச்சிட்டு குடும்பத்த கவனிக்காதவர்,அவர் புள்ளைக்கே நான் தான் பீஸ் கட்னேன் அவரெல்லாம் எனக்கு அட்வைஸ் பன்றார் – கூல் சுரேஷ்

0
1297
- Advertisement -

தொகுப்பாளினியிடம் அத்துமீறி நடந்து கொண்டது குறித்து கூல் சுரேஷ் மீண்டும் பதிவிட்டிருக்கும் ஒரு வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வெந்து தணிந்தது காடு எஸ்டிஆருக்கு ஒரு வணக்கத்தை போடு என்ற வசனம் மூலம் பிரபலமான கூல் சுரேஷ். இவர் தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு இவர் பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் இவர் படங்களில் கலர் கலராக ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூம் போட்டு கலக்கிய இவர் சினிமாவில் வில்லனாக தான் அறிமுகமானார். பின் காமெடியனாக மாறி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லை. தற்போது இவர் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் சமீப காலமாக அணைத்து ஹீரோக்களின் படங்களை வித்யாசமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

- Advertisement -

சரக்கு படம்:

இப்படி ஒரு நிலையில் மன்சூர் அலிகான் பட விழாவில் கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம் எல்லை மீறி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சரக்கு. இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு பக்தி பாடலை எழுதி இசை அமைத்திருக்கிறார்.

கூல் சுரேஷ் நடந்து கொண்ட விதம்;

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கூல் சுரேஷும் கலந்துகொண்டார். இந்த விழாவில் கூல் சுரேஷ், ‘ மேடையில் அனைவருக்கும் மாலை போட்டீர்கள் ஒருத்தருக்கு மாலை போட்டீர்களா என்று அருகில் இருந்த தொகுப்பாளினி மீது சட்டென மாலையை போட்டார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த தொகுப்பாளினி கூல் சுரேஷ் மாலை போட்டதுமே அதனை கழட்டி எறிந்து விட்டு முகம் சுளித்தார். இந்த செயலைக் கண்டு அரங்கில் இருந்து அனைவருமே ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தார்கள்.

-விளம்பரம்-

தொகுப்பாளினி ஐஸ்வர்யா வீடியோ:

பின் மன்சூர் அலிகான் கண்டித்து கூல் சுரேஷை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார். இதனால் கூல் சுரேஷும் பகிரங்க மன்னிப்பு கேட்டார். அதன் பின் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து தொகுப்பாளினி ஐஸ்வர்யா, அதை நினைத்தால் இன்னும் எனக்கு அதிர்ச்சியாக தான் இருக்கிறது. என் தோள்பட்டையை பலவந்தமாக அழுத்தி திடீரென்று அப்படி நடந்து கொண்டார். கன்னத்தில் பளார் என்று ஒரு அடியாவது கொடுக்காமல் விட்டோமே என்று இப்போது நினைக்கிறேன்

CoolSuresh

கூல் சுரேஷ் வீடியோ:

. இன்னொரு முறை இதுபோல நடந்தால் ஒன்று கன்னத்தில் ஒரு அடியாவது கொடுப்பேன் இல்லாவிட்டால் போலீசில் புகார் அளித்து விடுவேன்என்று கூறி இருந்தார்.இதை அடுத்து பலரும் கூல் சுரேஷை பயங்கரமாக விமர்சித்து பதிவு போட்டிருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒரு வீடியோவை கூல் சுரேஷ் போட்டு இருக்கிறார். அதில் அவர், நான் அந்த சகோதரி மீது விளையாட்டாக மாலை போட்டேன். அதற்காக மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்கிறேன். நான் விளையாட்டாக செய்தது வினையாகப்போச்சு. வறுமையில் தவிக்கிறேன். எனக்கு யாராவது ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் என்று கூறி இருக்கிறார்.

Advertisement