சிம்பு மனசே மனசு, படத்தில் நடிக்கவில்லை என்றாலும் கூல் சுரேஷுக்கு கிடைத்த பெருமை – கண்ணீர் விட்ட கூல் சுரேஷ்.

0
386
cool
- Advertisement -

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்திற்காக கடந்த ஓராண்டிற்கும் மேலாக குரல் கொடுத்து வந்த கூல் சுரேஷுற்கு 50வது நாள் கொண்டாட்டத்தில் படக்குழு கவரவும் செய்து இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. சில ஆண்டுகளுக்கு முன்னர் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்த சிம்பு இடையில் நடித்த பல்வேறு திரைப்படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது. அதேபோல இவர் உடல் எடை கூடியதால் இவர் நடிக்கும் பழங்கள் எல்லாம் பெரும் கேள்விக்கு உள்ளானது. இப்படி ஒரு நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், அந்தத் திரைப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்திருந்தார்.இ ந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து சிம்புவிற்கு ஒரு ரீ என்ட்ரியாக அமைந்திருந்தது இந்த படத்தின் வெற்றிக் களிப்பில் இருந்த சிம்புவிற்கு அடுத்த ஒரு உற்சாகமாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் அமைந்திருந்தது. இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார்.

- Advertisement -

பெரும் வரவேற்பை பெற்ற படம் :

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான்இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்துஇருந்தனர். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையால் இந்த படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

கூல் சுரேஷுக்கு பரிசு :

இந்நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் , சரத்குமார் உள்ளிட்ட துறை பிரபலங்கள் பங்கேற்றனர். மேலும், இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆனால், படத்தில் பணியாற்றதா கூல் சுரேஷுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் டைட்டில் வெளியானதில் இருந்தே இந்த படத்தின் பெயரை பிரபலப்படுத்தியவர் கூல் சுரேஷ் தான்.

-விளம்பரம்-

தயாரிப்பாளர் கொடுத்த பரிசு :

இப்படி படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கும் படத்தின் நாயகன் சிம்புவிற்கு பரிசு கொடுத்த ஐசரி கணேசனிடம் ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து விளம்பரம் செய்து வந்த கோவில் சுரேஷிற்கு நிச்சயம் ஏதாவது ஐசரி கணேசன் பரிசு கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வந்தனர். இதை தொடர்ந்து கூல் சுரேஷிற்கு ஐசரி கணேசன் புதிதாக ஐபோன் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.

நெகிழ்ந்த கூல் சுரேஷ் :

மேலும் கூல் சுரேஷ் குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் ஐசரி கணேசன் ஏற்றிருக்கிறார். தனக்கு பரிசு கொடுத்ததோடு தன்னுடைய குழந்தைகளின் படிப்பிற்கும் உதவி செய்த தயாரிப்பாளர் ஐசரி கணேசனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த சுரேஷ் கணேஷ், சார் இனிமேல் நீங்கள் இருக்க வேண்டிய இடம் என் வீட்டு பூஜை அறையில் என்று கூறிவிட்டு பூஜை அறையில் சாமி படங்களுக்கு மத்தியில் ஐசரி கணேசன் புகைப்படத்தை வைத்து வணங்கி இருந்தார் கூல் சுரேஷ்.

Advertisement