சும்மா இருந்தவங்கள உசுப்பேத்தி இப்படி பண்ணிடாங்களே – யாஷிகா பங்கேற்ற நிகழ்ச்சியில் பந்தோபஸ்துக்கு சென்ற காவலர்களுக்கு வந்த சோதனை.

0
538
yashika
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர்.

-விளம்பரம்-

அதோடு இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான்.

- Advertisement -

யாஷிகா ஆனந்த்துக்கு ஏற்பட்ட விபத்து:

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தார். விபத்திற்குப் பின்னர் யாஷிகாவால் சரியாக நடக்க முடிய வில்லை.

படங்களில் கவனம் செலுத்தும் யாஷிகா ஆனந்த்:

இதனால் அவர் நடித்து வந்த படங்கள் மற்றும் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலிருந்தும் தற்காலிகமாக விலகி இருந்தார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட இவருக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், தான் முன்பைப் போல டாஸ்க்குகளை செய்ய முடியாது என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டாராம். தற்போது விபத்தில் இருந்து தேறி வந்துள்ள யாஷிகா மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் யாஷிகா ஆனந்த் அவர்கள் பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கிறார்.

-விளம்பரம்-

ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் யாஷிகா :

மயிலாடுதுறையில் நடைபெற்ற தனியார் நிறுவனம் நடத்திய ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யாஷிகா பங்குபெற்று ராம்ப் வாக் நடந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்கிறார். பின் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலரும் ராம்ப் வாக் நடந்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்று பலரும் புதுப்புது வித்தியாசமான ஆடைகளை அணிந்து ராம்ப் வாக் நடந்து இருக்கிறார்கள். இதை அடுத்து அங்கிருந்த காவலர்களையும் நடக்க சொல்லி பார்வையாளர்களும், போட்டியாளர்களும் வற்புறுத்தி இருக்கிறார்கள்.

ராம்ப் வாக் செய்ததால் பணிமாற்றம் செய்த போலீஸ்:

அவர்களும் மேடையில் சிங்கம் பாடலுடன் ராம்ப் வாக் நடந்து இருந்தார்கள். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை தொடர்ந்து சிலர், போலீஸ் உடையில் இந்த மாதிரி ராம்ப் வாக் நடப்பதா? என கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து மயிலாடுதுறையில் பணிபுரிந்த மூன்று பெண் போலீஸ், நான்கு ஆண் போலீசை வெவ்வேறு பிரிவுகளில் பணி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது ஒழுங்கு நடவடிக்கைக்காக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement