மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிமன்றம் – லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனையை உறுதி செய்த நீதிபதி.

0
338
lingusamy
- Advertisement -

காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் இயக்குனர் லிங்குசாமி குறித்த சர்ச்சை வைரலாகி வருகிறது. அதாவது, 2014 ஆம் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் உருவாக இருந்த படம் எண்ணி ஏழு நாள். இந்த படத்தை தயாரிக்க லிங்குசாமி அவர்கள் நான் ஈ, இரண்டாம் உலகம் போன்ற படங்களை தயாரித்த பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக கடனாக வாங்கி இருந்தார்.

-விளம்பரம்-
lingusamy

பின் லிங்குசாமி வாங்கிய கடனை திருப்பி கொடுக்க 35 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்திருந்தார். இந்த காசோலையை வங்கியில் கொடுத்த போது பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதனால் பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து இருக்கிறது. அப்போது இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்திருந்தது.

- Advertisement -

காசோலை மோசடி வழக்கு:

மேலும், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு இட்டு இருக்கிறது. இந்த வழக்கை எதிர்த்து லிங்கு சாமி மேல் முறையீடு செய்தனர். இந்நிலையில் இந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லிங்குசாமியின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து அவருக்கு விதித்த ஆறு மாத சிறை தண்டனை உறுதி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் கோலிவுட் விரட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லிங்குசாமி.

இயக்குனர் லிங்குசாமி திரைப்பயணம்:

இவர் திருப்பதி புரோடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதலில் இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பிறகு 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி முதன் முதலாக தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
lingusamy

லிங்குசாமி இயக்கிய படம்:

மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் வெளிவந்த ‘தி வாரியர்’ படத்தை இயக்கினார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது. தமிழில் படம் சரியாக ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்.

Advertisement