Gvm-ன் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ சீரிஸ்ஸை பங்கமாக கலாய்த்த தமிழ் பட இயக்குனர். விழுந்து விழுந்து சிரித்த சின்மயி.

0
2513
- Advertisement -

சமீபத்தில் வெளியான கெளதம் மேனனின் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ சீரிஸ்ஸை தமிழ் இயக்குனர் பங்கமாக கலாய்த்து உள்ளார். மணிரத்னம், ஜெயேந்திரா பஞ்சாபகேசன் தயாரிப்பில் நெட்ஃபிளிக்ஸில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான ஆந்தாலஜி வகை வெப் சீரிஸ் ‘நவரசா’. 9 கதைகள் கொண்ட இந்த சீரிஸ்ஸில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ், பார்வதி, ரேவதி, ரோகிணி எனப் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி என்னும் ஒன்பது அபிநயங்களை கருப்பொருளாகக் கொண்டு இந்த ஆந்தலாஜி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காதல் என்ற தீமில் உருவாகி இருப்பது தான் கௌதம் மேனனின் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ .‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அச்சம் என்பது மடமையடா’ என தன்னுடைய முந்தைய படங்களை எல்லாம் கெளதம் மேனன் சரியான அளவில் சேர்த்து அரைத்து கொடுத்துள்ளது போல இருக்கிறது இந்த ‘கிட்டார் கம்பி மேலே நின்று’. 

இதையும் பாருங்க : பாசமுள்ள மனிரதப்பா நான் மீச வச்ச குழந்தையப்பானு போது வரும் இந்த குழந்தை இந்த பிரபல சீரியல் நடிகை தான்.

- Advertisement -

நவராசா சீரிஸ்ஸில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பகுதி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மியூசிக்கல் சப்ஜெட்டில் கதை சொல்கிறேன் என்று திரைக்கதையில் எந்த ஸ்வாரஸ்யத்தையும் வைக்காமல் வெறும் வசனத்தை மட்டுமே வைத்து நகர்கிறது இந்த சீரிஸ். இப்படி ஒரு நிலையில் இந்த சீரிஸ்ஸை பங்கமாக கலாய்த்து உள்ளார் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதன்.

இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மொட்டை மாடியில் கரண்ட் கம்பிக்கு கீழே நின்றபடி போஸ் கொடுத்து இருப்பது போல புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘கரண்ட் கம்பி மேலே நின்று’ என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் கெளதம் மேனனின் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ வை தான் அமுதம் இப்படி கலாய்த்து உள்ளார் என்று கமன்ட் செய்து வருகின்றனர். அதிலும் சின்மயி விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.

-விளம்பரம்-

சி எஸ் அமுதன் இயக்கிய தமிழ் படம், தமிழ் படம் 2 போன்ற படங்களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் முதல் கடைக்கோடி நடிகர்கள் வரை பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்து தள்ளி இருந்தார். இவர் இறுதியாக நடிகர் விமலை வைத்து ‘ரெண்டாவது படம்’ என்ற படத்தை இயக்கி வந்தார். ஆனால், அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

Advertisement