வேலை இல்ல, அம்மா தொரத்திவிட்டாங்க, பிளாட்பாரத்தில் கையேந்தும் குக்கூ பட நடிகர் 0 வெளியான வீடியோ இதோ.

0
737
elango
- Advertisement -

ரூமுக்கு வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்குச் சென்றதால் பிளாட்பார்மில் தங்கி பாட்டு பாடி பிச்சை எடுக்கும் குக்கூ பட நடிகர் இளங்கோ குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் குக்கூ. இவர் இதற்கு முன்பு ஜோக்கர் என்ற படத்தை எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மாளவிகா நாயர், ஆடுகளம் முருகதாஸ், சோமசுந்தரம், இளங்கோ, நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் The Next Big Film Productions நிறுவனங்கள் தயாரித்து உள்ளது. படத்தில் அட்டகத்தி தினேசுக்கு ஜோடியாக மாளவிகா நாயர் நடித்திருந்தார். மேலும், இந்த படம் முழுக்க முழுக்க பார்வையற்றவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை. அதோடு கண்பார்வையற்ற ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான காதலை யதார்த்தமாக சொல்லும் படமாக குக்கூ அமைந்து இருந்தது. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

- Advertisement -

குக்கூ படத்தில் இளங்கோ:

படத்தின் கதை மட்டுமில்லாமல் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. மேலும், இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ்க்கு நண்பனாக நடித்து இருந்தவர் இளங்கோவன். இவர் படம் முழுக்க நாயகனுடன் பயணித்து இருப்பார். கதாநாயகனுக்கு அடுத்து இவருடைய கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு இருந்தது. படத்தில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் இவர் கண்பார்வையற்ற திறனாளியாக திறனாளி ஆவார். இந்நிலையில் வறுமை கொடுமையின் காரணமாக தங்க இடமில்லாமல் பிளாட்பார்மில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இளங்கோவன் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

குக்கூ பட நடிகர் இளங்கோவின் வாழ்கை:

வறுமையின் பிடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளங்கோவனை சமீபத்தில் ஊடகமொன்று பேட்டி எடுத்து இருந்தது. அதில் அவர் கூறியது, என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் 2019 ஆம் ஆண்டே சென்னைக்கு வந்து விட்டேன். இங்கு வாடகை வீடு எடுத்து தங்கி வந்தேன். பின் பாட்டு பாடி அதில் வரும் பணத்தை வைத்து பிழைப்பை நடத்தி வருகிறேன். குக்கூ பட இயக்குனர் மூலம் தான் எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

குக்கூ நடிகர் பிச்சை எடுக்க காரணம்:

இருந்தாலும் என்னால் வாய்ப்பு போய் தேடி நடிக்க முடியவில்லை. அதனால் நான் வழக்கம் போல் என்னுடைய பாட்டு தொழில் பாடி பிழைத்து வந்தேன். கொரானா ஊரடங்கு சமயத்தில் வயிற்றுப் பிழைப்புக்கு ரொம்ப கஷ்டமானது. வெளியில் செல்ல முடியாத காரணத்தினால் ஒரு வேளை சாப்பாட்டுக்கு எல்லாம் கஷ்டப்பட்டு இருந்தேன். இதனால் ரூம் வாடகை கூட கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். அதற்குப் பிறகுதான் வேறு வழியில்லாமல் பிளாட்பார்மில் வந்து தங்கினேன்.

வைரலாகும் இளங்கோ அளித்த பேட்டி:

பின் பிளாட்பார்மில் பாட்டுப்பாடி பிச்சை எடுத்து வருகிறேன். தற்போது சுரங்கப்பாதையில் தங்கி இருக்கிறேன். ஆனால், மிகப் பெரிய பாடகராக வரவேண்டும் என்பது தான் என்னுடைய கனவு என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் இவருடைய எதிர்காலம் மாறுமா? குக்கூ பட நடிகர்கள், சினிமா பிரபலங்கள் இவருடைய வாழ்க்கையை மாற்றுவார்களா? என்பதை இனிவரும் காலங்களில் தான் பார்க்கணும்.

Advertisement