படிக்க வசதி இல்லை, உப்பு தண்ணீர், வறுமையின் கோரம்- சூப்பர் சிங்கர் விஷ்ணுவிற்கு உதவிய டி.இமான்

0
174
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் நிலைத்து இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

அதோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள். சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட, மழலை குரல்கள் ஒலிக்கும் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

இந்த மத்தியில் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விஷ்ணு என்ற சிறுவன் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் பாடிய பாடல் அனைவரின் மனதையும் உருக்கி இருந்தது. இவருடைய குரலை கேட்டு பலருமே பாராட்டி இருந்தார்கள்.

விஷ்ணு குறித்த தகவல்:

மேலும், விஷ்ணு புதுக்கோட்டை மாவட்டத்தில் குருகுளாம்பட்டி என்ற ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர்.
இவருக்கு 12 வயது. இவருடைய அப்பா, அம்மா இருவருமே கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தினம் 200 ரூபாய் தான் வருமானம். விஷ்ணு பாடிய நிகழ்ச்சியை கூட அவர்களால் பார்க்க முடியாது. காரணம், அவர்கள் வீட்டில் எந்த ஒரு டிவியுமே கிடையாது. இவருடைய இசை திறமையை பாராட்டி நடுவர்கள் மட்டும் இல்லாமல் பலருமே புகழ்ந்து பேசி இருந்தார்கள்,

-விளம்பரம்-

டி. இமான் செய்த உதவி:

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவரான இசையமைப்பாளர் டி. இமான் அவர்கள் விஷ்ணுவின் உடைய இசை திறமையை பாராட்டி கீபோர்டை பரிசாக அளித்தார். அது மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆனந்த், விஷ்ணுக்கு டிவியை கொடுத்திருக்கிறார். பிரியங்கா அவர்கள் க கேஸ் அடுப்பை பரிசாக கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பாடகர் மனோகரும், சித்ராவும் விஷ்ணுவின் உடைய படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து இருக்கிறார்கள்.

விஷ்ணு கிராமத்தின் ஊர்:

மேலும், விஷ்ணு கிராமத்தின் ஊர் மக்கள் பேட்டியில், விஷ்ணு அவனுக்காக மட்டும் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை. கிராமத்துக்காக தான் அவர் இந்த மேடை ஏறி இருக்கிறார். அந்த ஊரில் தண்ணீரே கிடையாது. கிடைக்கும் தண்ணீருமே உப்பு தண்ணீர் தான். அதை குடித்தால் பலருக்குமே பல உடல் வியாதிகள் வருகிறது. தண்ணீர் எடுக்க பல கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். இதை அடுத்து சூப்பர் சிங்கர் குழுவும் விஷ்ணு ஊரை விசாரிக்க சென்றிருக்கிறார்கள். அப்போது அவர்கள் சொன்னது உண்மை என்று தெரியவந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் விஷ்ணுவின் கிராமத்திற்கு உதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement