தசாவதாரம் படத்தில் கடலில் வீசிய பெருமாள் சிலை உண்மையில் எங்கு இருக்கு தெரியும் ? நீங்கள் அறிந்திராத வரலாறு இதோ.

0
1017
dasavatharam
- Advertisement -

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளிவந்த படம் தசாவதாரம். இந்த படத்தில் கமல் ஹாசன், அசின், மல்லிகா ஷெராவத் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் கமலஹாசன் 10 வேடங்களில் நடித்து சாதனை செய்து இருப்பார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மேலும், இந்த படத்தில் ஆரம்பத்தில் 12ஆம் நூற்றாண்டில் சோழ அரசன் கோவிந்தராஜர் சிலையை நடுக்கடலில் வீசுவார். இறுதியில் சுனாமி போன்ற காட்சியில் கோவிந்தராஜர் சிலை கரை ஒதுங்கி இருக்கும். இந்த மாதிரியாக படத்தில் வந்த காட்சிகள் உண்மையிலேயே 12ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவம்.

-விளம்பரம்-

மேலும், படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சிலை சுனாமியில் கரை ஒதுங்கி இருப்பது போல் காட்டப்படுவார்கள். ஆனால், அது உண்மை இல்லை. சோழ மன்னனால் கடலில் வீசப்பட்ட கோவிந்தராஜர் சிலை வேறு இடத்தில் இப்போது மக்கள் வழிபட்டு வருகிறார்கள். வைணவத்திற்கும் சைவத்திற்கும் இடையில் நடந்தது என்ன? படத்தில் காண்பிக்கப் பட்ட பொய்யான காட்சிகளும் வரலாற்றில் மறைக்கப்பட்ட சில உண்மை காட்சிகளைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். ராஜராஜ சோழன் வழியில் வந்த விக்கிரம சோழனின் மகன் இரண்டாம் குலோத்துங்கன்.

- Advertisement -

குலோத்துங்க சோழன் புகழ்:

இவர் கிருமி கண்ட சோழன் என்று அழைக்கப்படுவார். இவர்கள் கங்கை கொண்ட சோழபுரத்தில் பிறந்தார். ஆனால், ஆட்சி புரிந்தது எல்லாம் தில்லை சிதம்பரம். இவருடைய ஆட்சி காலத்தில் எந்த ஒரு போரும் இல்லாமல் அமைதியாக சூழலில் நடந்தது. இப்படி இருக்கும் குலோத்துங்க சோழனுக்கு வைணவ சமயத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது காரணம் என்னவென்றால், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நந்திவர்ம பல்லவன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார். பதினோராம் நூற்றாண்டில் தில்லையை ஆண்ட குலோத்துங்க சோழன் நடராஜரின் திரு பணிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

கோவிந்தர் சிலையை அகற்ற சொன்ன குலோத்துங்க சோழன்:

அப்போது கோவிலில் திருப்பணி வேலைகள் செய்ய இடம் பற்றாமல் போனது. பின் சிவன் கோயிலில் ஏன் பெருமாள் சிலை இருக்க வேண்டும் என்று நினைத்து அந்த சிலையை அகற்றி கடலில் வீச குலோத்துங்க சோழன் முடிவெடுக்கிறார். அந்த காலகட்டத்தில் வைணவத்தின் மீது பெரும் பற்று கொண்டவர் ராமானுஜர். அதிக அளவில் வைணவத்தை பரப்பியவர் ராமானுஜர். இப்படி ஒரு நிலையில் விஷ்ணு சாமியை அகற்ற கூடாது கோவிலில் லட்சுமி கடாட்சம் போய்விடும். விஷ்ணு தான் பெரிய கடவுள் என்று விஷ்ணு சிலையை அகற்றப்படுவதை எதிர்த்து ராமானுஜர் சைவர்கள் மீது போராட்டம் செய்தார்.

-விளம்பரம்-

போராடிய வைணவ பக்தர்கள்:

பின் இதைப் பற்றி பேசுவதற்காக சோழ மன்னனிடம் சென்று இருக்கிறார்கள். அங்கு போய் விஷ்ணு தான் பெரிய கடவுள் என்று பேசி இருக்கிறார்கள். இதனால் மன்னனுக்கும் வைணவம் வழிபடும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட குலோத்துங்க சோழன் வைணவ பக்தர்களின் கண்ணை தோண்டி எடுக்க உத்தரவு போட்டாராம். இதற்காகப் போராடிய ராமானுஜனை தில்லையை விட்டு வெளியேற உத்தரவிட்டார். மேலும், ராமானுஜரும் தன் சீடர்களுடன் சேர்ந்து மைசூர் நோக்கி புறப்பட்டார். ராமானுஜன் தில்லையை விட்டு புறப்பட்டதும் வைணவ பக்தர்கள் சோழ மன்னர்களை எதிர்த்து பேச முடியாமல் வாயை மூடியிருக்கிறார்கள்.

This image has an empty alt attribute; its file name is 1-150-1024x438.jpg

கடலில் வீசப்பட்ட கோவிந்தர் சிலை:

பின் தில்லை முழுவதும் சிவ வழிபாடு மட்டும் தான் நடைபெற்றது. அதோடு விஷ்ணு இருக்குமிடம் பார்க்கடல் தான் என்று கோவிந்தர் சிலையை கடலில் தூக்கி எறிந்து இருக்கிறார். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த வைணவர்கள் மனதை பெரிதும் புண்படுத்தியது. ஆனால், தசாவதாரம் படத்தில் ராமானுஜரின் சீடராக கமல் நடித்து இருப்பார். அதில் கோவிந்தராஜன் சிலையோடு ஒரு மனிதரை கட்டிப்போட்டு கடலில் வீசப்பட்டது எல்லாம் படத்திற்காக உருவாக்கப்பட்டது. மேலும், குலோத்துங்க சோழன் சொன்ன இடத்தில் தான் பெருமாள் சிலையை கடலில் போட்டார்கள்.

கண்டெடுக்கப்பட்ட கோவிந்தர் சிலை:

அந்த இடத்தை பார்த்த வைணவ பக்தர்கள் அந்த சிலையை மீட்டு எடுத்தார்கள். அதை தில்லைக்கு கொண்டுவராமல் ராமானுஜர் திருப்பதியில் இருப்பதை தெரிந்து பெருமாள் சிலையை திருப்பதிக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால், அந்த சிலை அடிபட்டு உடைந்து இருப்பதால் சிலைக்கு வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லி அந்த நாட்டு மன்னன் உதவியால் ராமானுஜர் கோவிந்தராஜர் சிலையை சுண்ணாம்பு கற்களால் செய்யப்பட்டு திருப்பதியில் வைத்து பிரதிஷ்டை செய்தார். பின் கடலில் வீசப்பட்ட அந்த சிலையும் திருப்பதியில் தான் உள்ளது.

கடலில் வீசப்பட்ட சிலை உள்ள இடம்:

திருப்பதியில் நரசிம்ம தீர்த்தம் பகுதியில் உள்ள மஞ்சள் நீலா கொண்டா இடத்தில் தெலுங்கில் நல்ல தண்ணி இடத்தில் உள்ளது. பெருமாள் குடியிருக்கும் இந்த நல்ல தண்ணி இடம் எப்போதும் நல்ல தண்ணியால் தான் நிறைந்திருக்கும். கோடைகாலத்திலும் வறண்டு போகாமல் இருக்கும். அங்கு இருக்கும் மக்கள் இது திருமாலின் மகிமையால் மட்டும் நடக்கும் என்று சொல்வார்கள். அதேபோல் படத்தில் காண்பிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சிலைகள் திருப்பதி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ரயில்வே கேட்டை தாண்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில் வைத்திருக்கிறார்கள்.

Advertisement