தமிழ் சினிமா உலகில் ஜாம்பவானாக திகழ்பவர் கமல்ஹாசன். 2008 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம் தான் “தசாவதாரம்”. இந்த படத்தை தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் இயக்கினார். இந்த படத்தில் நம்ம உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் 10 மாறுபட்ட வேடங்களில் நடித்து உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தில் கதாநாயகியாக அசினும் இரண்டு வேடங்களில் நடித்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இந்த தசாவதாரம் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தையும் கமலஹாசன் தான் செய்தார். மேலும், இந்த படத்தில் கமல் ஹாசன், அசின், மல்லிகா ஷெராவத் உள்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வித்தியாசமான முறையில் இருந்தது.
இந்த படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது சமூக வலைத்தளங்களில் தசாவதாரம் படத்தை முதலில் இயக்க கமலஹாசன் அவர்கள் வேறொரு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு அவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட் கொடுத்து உள்ளது. இவர் திரை உலகிற்கு வருவதற்கு முன் விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். இவர் திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், ஒலிச்சேர்க்கை கலைஞர் என பல முகங்களை கொண்டு உள்ளார். மேலும், இவர் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கௌதம் மேனன் அவர்கள் தசாவதாரம் படம் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, இந்த படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் கனகச்சிதமாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எடுத்து இருப்பார். மேலும், இந்த படம் உலக அளவில் மாபெரும் வெற்றியை தந்தது. ஆனால், இந்த படத்தின் கதை திரைக்கதை வசனம் எல்லாத்தையும் எழுதிய கமலஹாசன் அவர்கள் முதலில் இந்த படத்தை இயக்க என்னிடம் தான் கேட்டார். ஆனால். நான் எழுதிய கதையை தான் படமாக்குவேன் என்று அவரிடம் கூறினேன். அதனால் தான் வேட்டையாடு விளையாடு படத்தை கமல்ஹாசன் அவர்களை வைத்து இயக்கியதாக கௌதம்மேனன் கூறி உள்ளார்.
சமீபத்தில் தான் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “என்னை நோக்கி பாயும் தோட்டா” படம் நீண்டகால காத்திருப்புக்கு பிறகு வெளி வந்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் அனுஷ்கா, மாதவனை வைத்து “நிசப்தம்” என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. இந்த படம் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்கள். இந்த படம் மிலிட்டரி கதைக்களத்துடன் உருவாகும் ஆக்சன் திரில்லர் கதையாக உள்ளது. அதோடு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்து உள்ளார். அதோடு துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக போய்க் கொண்டிருக்கின்றது.