‘அம்மம்மா உன் முகம் பார்க்கையிலே’ – பங்காரு அடிகளார் முன் மனமுருகி பாடிய பிரபல தமிழ் இசையமைப்பாளர்.

0
519
bangaaru
- Advertisement -

பங்காரு அடிகளார் முன்பு இசை அமைப்பாளர் தேவா நடித்திருக்கும் இசை கச்சேரி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் தேவா. இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் வேலூர் மாவட்டம் அருகில் உள்ள மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர். இவர் சினிமா துறையில் கடந்த 20 வருடங்களாக பயணித்து வருகிறார்.

-விளம்பரம்-

இசையமைப்பாளர் தேவா என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கானா தான். அந்த அளவுக்கு இவருடைய கானா பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இவருக்கு என்று ஓரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் இரவு நேரங்களில் திரைப்படங்களை பார்த்துவிட்டு வீடு திரும்புவது தான் வழக்கம். அப்போது தான் இவர் கேட்ட கானா பாடல்கள் இவரை ஈர்த்தது. பின் அப்படியே படங்களில் இசைக்க ஆரம்பித்தார்.

- Advertisement -

தேவாவின் இசைப்பயணம்:

ஆரம்ப காலங்களில் இசை கலைஞர்களான காமேஸ், ராஜாமணி ஆகியோரிடம் இவர் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அவர்களிடம் இருந்து ஹார்மோனியம் வாசிப்பதையும் கற்றுக் கொண்டார். அதன் பின்னர் இசை கலைஞர்களான சந்திர மௌலி, எஸ் வி சேகர் உள்ளிட்ட பலரிடமும் ஹார்மோனியம் வாசிப்பாளராக தேவா பணியாற்றி இருந்தார். பின் மேற்கத்திய இசையை மாஸ்டர் தன்ராஜ் இடம் இருந்து தேவா கற்றுக்கொண்டார்.

தேவா இசையமைத்த முதல் படம்:

அதனை தொடர்ந்து இவர் சில காலம் தூர்தர்ஷனில் அலுவலக பணியாளராக பணியாற்றி இருந்தார். ஆரம்பத்தில் திரைப்படங்களில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் இவர் அதிகம் பக்தி பாடல்களில் கவனம் செலுத்தினார். இதுவரை இவர் கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை இசையமைத்திருக்கிறார். பின் 1984 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான மனசுக்கேத்த மகாராசா என்ற படத்தில் இசையமைப்பாளராக தேவா அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல படங்களுக்கு இசை அமைத்தார்.

-விளம்பரம்-

பங்காரு அடிகளார் முன் இசை கச்சேரி:

மேலும், இவர் விஜய்,அஜித்,ரஜினி,கமல் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து பாடியிருக்கிறார். இதனால் இவருக்கு சிறந்த இசை காண தமிழக அரசின் விருதும் வழங்கப்பட்டது. குறிப்பாக சொல்லப் போனால் 90 காலகட்டத்தில் வெளிவந்த தேவாவின் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டு தான் வருகிறது. இப்படி புகழின் உச்சத்தில் இருந்த தேவா அவர்கள் பங்காரு அடிகளார் முன் கச்சேரி செய்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ:

அதாவது, தேவா அவர்கள் சமீபத்தில் மேல்மருவத்தூர் ஓம் சக்தி கோவிலுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் பங்காரு அடிகளாரை பார்த்து ‘ஆயிரம் சொல்லத்தான் ஓடி வந்தேன் அம்மம்மா, உன் முகம் பார்க்கையிலே பங்காரு அம்மம்மா’ என்று இசையமைப்பாளர் தேவா கச்சேரி செய்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement