மீண்டும் ‘தேவதையை கண்டேன்’ ஷூட்டிங்கிற்கு சென்ற ஈஸ்வர்-மஹாலக்ஷ்மி. சீரியல் எடுத்த அதிரடி முடிவு.

0
83378
Eswar
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகர்களான ஈஸ்வர் மற்றும் மஹாலக்ஷ்மியின் பஞ்சாயத்து தான் தற்போது தமிழ் சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் சர்ச்சையான ஒரு விஷயமாக போய் கொண்டு இருக்கிறது. சன் ம்யூஸிக் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்த மஹாலக்ஷ்மிக்கும், தேவதையை கண்டேன் தொடரில் ஹீரோவாக நடித்த ஈஸ்வர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக ஈஸ்வரின் மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ காவல் துறையில் புகார் அளித்திருந்தார். மேலும், விவாகரத்து கேட்டு தன்னை கொடுமை படுத்தியாக ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில் நடிகர் ஈஸ்வர் மற்றும் அவரது தாயார் இருவரையும் போலீசார் கைதுசெய்து பின்னர் விடுவித்தனர்.

-விளம்பரம்-
Image result for Devathaiyai kanden Serial

- Advertisement -

இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மஹாலக்ஷ்மியா இப்படி எல்லாம் செய்துள்ளார் என்று ரசிகர்கள் புலம்பி தள்ளி வருகின்றனர். சன் ம்யூஸிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த மஹாலக்ஷ்மி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசி’ சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர், மகாலட்சுமி. எட்டு வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்துவருபவர்.

இறுதியாக , சன் டிவியில் ‘தாமரை’ மற்றும் ‘வாணி ராணி’ சீரியலிலும், ஜீ தமிழ் சேனலில் ‘தேவதையைக் கண்டேன்’ சீரியலிலும் ஒரு வில்லி கதாபாத்திரத்தில் பரப்பாக நடித்து வந்தார். இதே தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த ஈஸ்வருக்கு இவருக்கும் தொடர்பு ஏற்படவே ஈஸ்வரின் மனைவி ஜெய்ஸ்ரீகும் பிரச்சனை முற்றி விவாகரத்து வரை சென்றுள்ளது. அதே போல மஹாலக்ஷ்ஷ்மியையும் தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் , ஈஸ்வர் – மகாலட்சுமி இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் சீரியலை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியானது.

-விளம்பரம்-
Image result for Devathaiyai kanden Serial

இந்த நிலையில் தேவதையை கண்டேன் சீரியலில் நடித்து வரும் சிலரிடம் இதுகுறித்து கேக்டக்ப்பட்ட போது, ஈஸ்வர் இந்த பிரச்சனையில் சிறைக்கு சென்ற சமயத்தில் சீரியலுக்கு கொஞ்சம் பிரேக் கொடுக்கப்பட்டு இருந்ததாகவும். தற்போது 15 நாள் பிரேக் முடிந்து மீண்டும் படப்பிடிப்புகள் ஆரம்பித்துள்ள நிலையில் ஈஸ்வர் மற்றும் மகாலட்சுமியும் வருவார்களா என்று படக்குழுவினர் சந்தேகத்தில் இருந்து வந்த நேரத்தில் இருவருமே படப்பிடிப்பிற்கு வழக்கம்போல சென்றுள்ளார்கள். மேலும், இந்த பிரச்சனையால் அவர்களுக்கு எந்தவிதமான கஷ்டமும் உண்டாகவில்லை என்றும் இருப்பினும் படப்பிடிப்பு தளத்தில் மற்றவர்கள் முகத்தில் கொஞ்சம் இறுக்கம் இருப்பதாகவும் இவர்களது இந்த பிரச்சினை ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கி உள்ளது என்றும் சிலர் பேசுகிறார்கள். தேவையில்லாத சர்ச்சைக்குள் சிக்கிய இவர்கள் இருவரையும் நீக்கிவிட வேண்டுமென்று சேனல் தரப்பில் பேசப்பட்டு வந்ததால் இந்த சீரியலை இந்த மாத இறுதி யோடு முடித்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்கள்.

Advertisement