பொது இடம் என்று கூட பாராமல், பணியாளரை அழைத்து தேவிஸ்ரீ பிரசாத் செய்த செயல் – வைரலாகும் வீடியோ.

0
429
Dsp
- Advertisement -

பொது இடத்தில் அசிஸ்டன்ட்டை அழைத்து டிஎஸ்பி செய்த செயல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் ஆந்திரா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தெலுங்கு மொழியில் மட்டுமில்லாமல் தமிழ் உட்பட பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் இசையமைப்பாளர் மட்டும் இல்லாமல் பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவருடைய இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சொல்லப்போனால், இன்றைய இளைஞர்களின் இசை ஜாம்பவானாக தேவி ஸ்ரீ பிரசாத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த தீ வாரியார் என்ற படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து இருந்தார்.

- Advertisement -

தேவி ஸ்ரீ பிரசாத் திரைப்பயணம்:

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது. இதனை தொடர்ந்து நாகேஷ் குகுனூர் இயக்கத்தில் உருவாகி வரும் குட் லக் சகி என்ற படத்தில் இவர் இசையமைத்திருக்கிறார். பின் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘சூர்யா 42’ என்ற படத்திற்கு இவர் தான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கும் படங்கள்:

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாக இருக்கும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார். இந்த படமும் இந்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

தேவி ஸ்ரீ பிரசாத் செய்த செயல்:

இந்நிலையில் பொது இடத்தில் அசிஸ்டன்ட்டை அழைத்து டிஎஸ்பி செய்த செயல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, விருது வழங்கும் விழா ஒன்றிற்கு டிஎஸ்பி சென்று இருக்கிறார். அங்கு அவரை மீடியாக்கள் போட்டோ எடுத்திருக்கிறார்கள். அப்போது டிஎஸ்பி தன்னுடைய அசிஸ்டன்ட்டை அழைத்து தன்னுடைய உடையை சரி செய்ய சொல்லி இருக்கிறார்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இதனால் அவர் டி எஸ் பியின் காலில் அவருடைய துணி மடிப்பை எடுத்துவிட்டு, ஷூவை எல்லாம் துடைத்திருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே டிஎஸ்பி-யின் செயலை கண்டித்து விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement