சமீப காலமாகவே சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்த செய்திகள் அதிகரித்து வருகிறது. தமிழ் சினிமாவை பொறுத்த வரை இமான், விஷ்ணு விஷால், பப்லு என்று பல பிரபலங்கள் விவகாரத்தை அறிவித்து இருந்தனர். அந்த வகையில் நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு ரசிகர்கள் மத்தியில் பேரிடியை ஏற்படுத்தி இருந்தது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார். ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு தனுஷ் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். அதிலும் சமீப காலமாகவே ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
இப்படி ஒரு நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருந்தது ரசிகர்களுக்கு மட்டும் இல்லமால் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வந்தனர். இவர்களின் பிரிவிற்கு தனுஷ் இதுவரை சிக்கிய சர்ச்சைகள் தான் காரணம் என்று கூறி வந்தனர்.
தனுஷ்- ஐஸ்வர்யா இடையே கருத்து ஏற்பட்டதை அறிந்தும் ரஜினி மற்றும் லதா இருவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. தனுஷை சமரசம் செய்ய பல தடவை பேச்சுவார்த்தைகள் நடத்தி இருந்தார்கள். ஆனால், இந்த விஷயத்தில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இதனால் ரஜினி மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமே பலனளிக்காமல் போய் விட்டது என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது.
பிரிவதாக அறிவித்தாலும் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் சட்டப்படி விவாகரத்து கோராமல் இருந்தனர். இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இந்த மனு குறித்த விசாரணை விரைவில் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் இன்னொரு மகளான சௌந்தர்யாவிற்கு அஸ்வின் என்பவருடன் 2010ஆம் ஆண்டு திருமணம் ஆனது அவர்களுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு விசாகன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா என்பதும் குறிப்பிடத்தக்கது.