தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “மாரி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயராகி வருகிறது.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இரண்டு வருடங்களுக்கும் மேல் தயாரிப்பிலிருந்து வந்த இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ்
இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் போன்றவர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நெல்லை, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
பாலாஜி மோகன் இயக்கி வரும் இந்த படத்தை தனுஷின் ஒண்டெர் பார் நிறுவனம் தயாரித்துள்ளது.படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்ட்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மாரி முதல் பாகத்தில் இருந்த அதே மாஸ் கெட் ஆப்பில் இருக்கிறார் நடிகர் தனுஷ்.