கோலிவுட்டில் மிக பிரபலமான முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இதனை அடுத்து வரவேற்பை நானே வருவேன், மாறன், வாத்தி போன்ற படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படி இவர் பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக நடித்து இருந்தார். தற்போது தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் மற்ற படங்களை போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
தனுஷ் நடித்த படங்கள்:
ரசிகர்கள் இந்த படத்தின் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். தற்போது தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தில் நடித்து இருக்கிறார். இதற்காக இவர் மொட்டை அடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ராயன் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்கி நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், தற்போது இந்த படத்தின் பணிகள் முடிந்துள்ள நிலையில் தனுஷ் புது படத்தை இயக்க இருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது.
#DD3 is Nilavukku enmel ennadi kobam .. A usual love story♥️ #neek .. Motion poster with @gvprakash magic https://t.co/V4kT0oFReB @wunderbarfilms pic.twitter.com/6gvJGvaXEb
— Dhanush (@dhanushkraja) December 24, 2023
புது படம் குறித்த தகவல்:
மேலும், தனுஷ் இயக்கம் புது படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற தலைப்பை வைத்திருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் தனுஷினுடைய உறவினர்கள், முன்னாடி நடிகர்கள், நடிகைகள் பலரும் நடிக்க இருக்கிறார்கள். இந்த படம் தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவின் காரணமாக எடுக்கப்பட்டதாக இருக்குமோ? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
சௌந்தர்யா பதிவு:
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் தனுஷ் திரைக்கதை வசனம் எழுதி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்கையான சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இந்த படம் உருவாக இருந்தது. ஆனால், தற்போது தனுசு இயக்கத்தில் உருவாக இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், சில வருடங்களுக்கு முன்பதாக தனுஷ் திரைக்கதை எழுதி அந்த படத்தை நான் இயக்க இருந்தேன். அதன் பிறகு அந்த திரைப்படம் கைவிடப்பட்டது. தற்போது தனுஷ் அவர்கள் அந்த திரைப்படத்திற்கான திரைக்கதை வசனத்தை எழுதி இயக்க இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம்:
அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தால் தான் தனுஷ் -ஐஸ்வர்யா இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காரணம், இந்த படத்திற்காக சௌந்தர்யாவுடன் தனுஷ் இணைந்து வேலை செய்யக்கூடாது என்று முதலில் ஐஸ்வர்யா சொன்னாராம். இதனால் தனுஷ்- ஐஸ்வர்யா இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.. அதற்கு பிறகு தான் அந்த படம் நின்றது. இருவருக்கும் மத்தியில் அந்த பிரச்சினை முற்றியதால் தான் இருவருமே பிரிந்து வாழ ஆரம்பித்தார்கள். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.