நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் என்று கூறிய மதுரை தம்பதியருக்கு எதிராக இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார்.
அதுமட்டும் இல்லாமல் இவர் ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருந்தது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் பாருங்க : சிங்கப்பூர் கல்லூரியில் பட்டம் பெற்ற சரத்குமார் – ராதிகாவின் மகன் – ப்பா, எப்படி இருக்கார் பாருங்க.
தனுஷின் மாறன் படம்:
இப்படி இவர்கள் அறிவித்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு இருந்தார்கள். மேலும், இவர்களுடைய விவாகரத்து குறித்து பலரும் கண்ணு, மூக்கு, காது வைத்து பல விதமாக கதைகளை அவிழ்த்து விட்டும் இருக்கின்றனர். இருந்தாலும் இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
தனுஷ் நடிக்கும் படங்கள்:
இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் தி கிரேட் மேன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், வாத்தி, sir, நானே வருவேன் ஆகிய பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் தனுஷ் தன்னுடைய மகன் என்று கூறிய மதுரை தம்பதியருக்கு எதிராக இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி மீனாட்சி. இந்த தம்பதியினரின் மூத்த மகன் கலையரசன். இவர் பிளஸ் 1 படிக்கும் போது காணாமல் போய்விட்டார்.
கதிரேசன் தம்பதியினர் அளித்த நோட்டீஸ்:
சினிமாவில் நடித்து வரும் தனுசை பார்த்துவிட்டு தனது மகன் கலையரசன் தான் தனுஷ் என்றும் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடி வழக்கு தெடர்ந்து இருந்தார்கள் கதிரேசன் தம்பதியினர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் ஊடகங்களிலும் தனுஷ் தான் எங்களுடைய மகன் என்று பேட்டி அளித்தார்கள். மேலும், இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்திருந்தது. பின் தங்களை கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சிப்பதாகவும் நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் கதிரேசன் தம்பதியினர் குற்றசாட்டி இருந்தார்கள்.
தனுஷ் சார்பில் வழக்கறிஞர் அளித்த நோட்டீஸ்:
இதுதொடர்பாக நடிகர் தனுசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும், அப்படி கேட்டால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ராஜா சார்பில் வழக்கறிஞர் காஜா மொய்தீன் கிஸ்தி கதிரேசன் தம்பதியினருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். தற்போது இந்த தகவல்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.