மூத்த மகன் தலைவர் மாதிரியே இருக்கார். தனுஷ் மகன்களின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத்திற்கு கமன்ட் செய்யும் ரசிகர்கள்.

0
118243
dhanush
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ். தனுஷ், தனது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன், ஆடுகளம், மாரி, வேலையில்லா பட்டதாரி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘3’ படத்தில் இவர் பாடிய “ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடல் வேற லெவல்ல உலக முழுவதும் உள்ள ரசிகர்களை தெறிக்காவிட்டது என்று கூட சொல்லலாம். மேலும், இந்த படத்தினை தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் யாத்ரா , இளையமகன் லிங்கா ஆவார்.

இதையும் பாருங்க : சொத்து விவரங்களை அனுப்பி திருமணம் செஞ்சுகிருயானு கேட்டார். நாயகி சீரியல் நடிகைக்கு வந்த லவ் ப்ரபோசல்.

- Advertisement -

மேலும், தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கி வருகிறார். இந்த நிலையில் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா, தனது இரண்டு மகன்களுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தில் மூத்த மகன் ரஜினி போலவும் இளைய மகன் தனுஷ் போலவும் இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தனுசின் மகன் இவ்வளவு பெருசா வளர்ந்துவிட்டாரா! ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டாரே என்றும் கூறி வருகிறார்கள். நடிகர் தனுஷ் தற்போது செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து உள்ள படம் “பட்டாஸ் படம் பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement