என் தொழில் மீது சத்தியமா சொல்றேன் – தமிழர்களை பிச்சை எடுக்க சொன்ன விவகாரம். 12 ஆண்டு கழித்து நடிகை கொடுத்த விளக்கம்.

0
363
- Advertisement -

ஐஸ்வ்ரயா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தில் நடித்துள்ள நடிகை தான்யாவிற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட தான்யா தமிழில் எழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நீ தானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன சில படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

சில வருடங்களுக்கு முன்பு சி எஸ் கே vs ஆர் சி பி அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டி குறித்து இவர் போட்டிருந்த பதிவு சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. அதில் தன்யா, தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்கிரமித்து அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம் என்று கூறியிருந்தார். இதனால் இவருக்கு எதிராக நிறைய கண்டனங்கள் வந்தது. அதுமட்டுமில்லாமல் ‘ஹேட்தன்யா’ என்ற ஹாக்ஸ் டேக்குகள் ட்ரெண்டிங் ஆகி இருந்தது.

- Advertisement -

இதனால் கடுப்பான தன்யா, இனி தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று சபதம் போட்டிருந்தார். சரி இப்போ இதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறீர்களா? ரஜினியின் லால் சலாம் படத்தின் கதாநாயகி இவர் தான். எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய இவரை ஹீரோயினியாக நடிக்க வைப்பதா என்று லால் சலாம் படத்திற்க்கு எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.

இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ள தான்யா ‘ நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்; கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக, நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன்.அதையே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அந்த நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துர்திர்ஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை.

-விளம்பரம்-

இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம், அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள்தான், அதிலிருந்து விலகி இருப்பதே எனக்குச் சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியதே அல்ல.நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழ் சினிமாவில் தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்ததிற்க்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன்.

அப்பொழுதும் இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்களே… அதனால் விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான் என் கனவிலும் நினைக்க மாட்டேன். என் ஆரம்ப காலங்களில், தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது. மனிதாபிமான அடிப்படையிலும், யாரையும் காயப்படுத்தும் விதத்திலும், எந்த சொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள் அல்ல.

இந்த சம்பவம் நடந்ததற்குப் பின் நான் சில தமிழ் திரைப்படங்களிலும், (ராஜர ராணி, நீதானே என் பொன் வசந்தம், கார்பன்) சில தமிழ் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன். அப்போது இது போன்ற எதிர்வினைகள் எதையும் நான் எதிர்கொள்ளவில்லை. சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது..அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சர்ச்சையினால் ரஜினிகாந்த், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும், மனவுளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன்.நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு, உங்கள் முன் இந்த கோரிக்கை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நாள் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு.” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement