மீண்டும் இணையும் தனுஷ் – ஐஸ்வர்யா ? உண்மை என்ன ? அதுக்குள்ள என்னென்னமோ கத கட்டிட்டாங்களே.

0
673
dhanush
- Advertisement -

தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ போகிறார்கள் என்ற பரவிய செய்திக்கு நண்பர்கள் அளித்து இருக்கும் பதில் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. தனுஷ்- ஐஸ்வர்யாவின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவருமே தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

தனுஷ் நடித்த படங்கள்:

சமீபத்தில் தனுஷ் நடித்த தி கிரேட் மேன் என்ற படம் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது.

தனுஷ் நடிக்கும் படங்கள்:

அதேபோல் தனுஷின் நானே வருவேன் படமும் கடந்த வாரம் தான் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir ஆகிய பல படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார். பிறகு ஐஸ்வர்யா படம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ போகிறார்கள் என்ற செய்தி சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

தனுஷ் நண்பர்கள் அளித்த பேட்டி:

அதாவது, ரஜினிகாந்த் அவர்கள் தனுஷ் – ஐஸ்வர்யா இருவர் இடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தார் என்ற செய்தி சோசியல் மீடியாவில் உலா வருகிறது. இது குறித்து தனுஷிற்கு நெருக்கமானவர்கள் கூறியது, தனுஷ் – ஐஸ்வர்யா இருவருமே தற்போது தனித்தனியாக தான் இருக்கிறார்கள். வார நாட்களில் குழந்தைகள் ஐஸ்வர்யாவிடமும், சனி, ஞாயிறு நாட்களில் தனுஷ் இடமும் இருக்கிறார்கள். இதற்கு முன்னே தனுஷ் ஐஸ்வர்யாவிற்கும் சமாதான பேச்சு வார்த்தைகள் நடந்தது. ஆனால், அவை எதுவும் ஏற்றுக்கொள்ள தக்கவை அல்ல.

தனுஷ்-ஐஸ்வர்யா குறித்து சொன்னது:

இருவருமே தேவைக்காக குழந்தைகள் செல்லும் இடத்திற்கு செல்கிறார்கள். இப்போது இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்ற செய்திகள் சோசியல் மீடியாவில் வருவது உண்மையானவை இல்லை. இருவரும் சேர்ந்து விவாகரத்து கூறும் எண்ணமும் இல்லை. மறுமணம் என்ற பேச்சுக்கே இடமே இல்லை. இந்த உண்மைகளை தெரியாத யாரோ சிலரால் பரப்பி விடப்பட்ட செய்தி தான் இது. பிரிந்தது பிரிந்தது தான். இதுதான் உண்மை என்று கூறியிருக்கிறார்கள்.

Advertisement